செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Thursday, August 19, 2010

ஏற்ற தாழ்வு


பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேளையாக, மதுரையில் உள்ள எனது அக்கா வீட்டிற்கு சென்றேன். அன்று மாலை அவர்கள் எல்லோரும் ,அக்கா மகனுக்கு பெண் பார்க்க புறப்பட்டார்கள். அக்கா நீயும் வாடா என்றாள். சரி என்று நானும் புறப்பட்டேன். ஒரு வாடகை கார் எடுத்துக்கொண்டு எல்லோரும் புறப்பட்டோம். பெண்ணின் வீடு பங்களா போன்று இருந்தது. எல்லோரும் உள்ளே சென்றோம். எங்களை வற்வேற்று. அமரச்செய்தார்கள். நான் அங்கு இருந்த பத்திரிக்கை ஒன்றை
எடுத்து புரட்டிகொண்டிருந்தேன். அவர்கள் மாப்பிள்ளை, பெண்ணின் படிப்பு மற்றும் வேலை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதில் ஒருவர் அக்காவிடம் ”இவர் யார்?” என்று கேட்டார். அத்ற்கு அக்கா “இவன் என் தம்பி, சென்னையில் இருக்கிறான்” என்றார்கள். அவர் உடனே அடுத்த கேள்வியை நேரடியாக என்னிடம் கேட்டார். “சென்னையில் என்ன செய்கிறீர்கள்?” என்றார். நான் சுருக்கமாக “ போக்குவரத்தில் பணிபுரிகிறேன்” என்று சொன்னேன். அவர் மீண்டும் விடுவதாக இல்லை. மேலும் எனக்கு இதுபோன்ற நிகழ்வுகள் முன்பே நடந்துள்ளது. “என்னவாக இருக்கிறீர்கள்?” என்றார். அத்ன்பிறகு நான் தயக்கமின்றி”நடத்துன்ராக இருக்கிறேன்” என்று கூறினேன்.
அப்போது அவர் முகம், நாம் வழியில் ஏதாவது அசிங்கத்தை மிதித்துவிட்டால் எப்படி மாறுமோ, அப்படி மாறியது. உண்மையில் நான்தான் அவரைப்பார்த்து அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் விற்பனைவரி அலுவலகத்தில் பணி புரிந்தார்.
அவருடைய உண்மையான வருமானத்தில் அவரால் இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி இருக்கமுடியாது. நானோ என்னுடைய உழைப்பில் கவுரவமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவன்.
இதுதான் உலகம். பின்னர் அந்த சம்பந்தம் நடைபெறவில்லை.
நான் அக்காவிடம்”இனிமேல் இம்மாதிரியான இடங்களுக்கு என்னை அழைக்காதே என்று கூறிவிட்டேன்.

No comments:

Post a Comment