செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Thursday, November 19, 2009

ஆண்மகன்

உலகில் குடும்பம் என்பது பெரும்பாலும்
ஆணின் உழைப்பு,பெண்ணின் அரவணைப்பு
இரண்டும் சேர்ந்ததுதான் என்பது உலக மரபு!
ஆனால் உண்மையில் நடப்பது வேறு மாதிரி!.
சாதாரண கீழ் ந்டுத்தர வருவாய் பிரிவில்
உள்ளவர்கள் வாழ்க்கை மிகவும் சிக்கலானது.
கணவன் ஏதோ சம்பாதித்துக்கொண்டுவந்து
கொடுப்பான். அதை மனைவி வைத்துக்கொண்டு
சமாளிப்பாள். இதுதான் ந்டைமுறை.
ஒரு நாள் அந்த் வீட்டில் குழ்ந்தைக்கு பால்
டப்பா தீர்ந்துவிட்டது. மனைவி கணவனிடம்
”மாலை வரும்போது பால் டப்பா வாங்கி
வாருங்கள்” என்று சொல்வாள். அத்தோடு
அவள் கவலை முடிந்துவிடும். ஆனால்
அந்த கணவன், அன்றைய தனது பணியை
முடித்து விட்டு பின்னர் குழந்தைக்கு பால்
டப்பா வாங்கியாக வேண்டும். ஆனால் அவனிடம்
பணம் இல்லை. பின்னர் யார்யாரிடமோ கேட்டு
ஒரு வழியாக பணம் புரட்டி, அதன் பின்னர்
கடைக்கு சென்று (அப்போதெல்லாம் பால் டப்பாக்கள்
கிடைப்பது மிகவும் அரிது) கடைக்காரரிடம்
கெஞ்சி அதனைப் பெற்று, அவன் வீடு
வரும்போது, ஏதோ உலகையே வென்றதுபோல்
தோன்றும்.
உண்மையில் இதுதான் சராசரி இந்தியனின்
பொருளாதார மற்றும் சமூக சூழ்ல்!

Wednesday, November 18, 2009

கல்விக்கடன்
நான் ஒரு குறைந்த வருமானமுள்ள
ஒரு அரசு ஊழியன். எனது மகன் +2
தேர்வில் நல்ல மதிப்பெண்
பெற்றதால் பொறியியல் கல்லூரியில்
சேர்க்கலாம் என்று முற்சித்து, ஒருவாறாக
அந்த வேலை முடித்து,எப்படியோ ப்ணம்
கட்டியாகிவிட்டது. சரி வங்கியில் கல்விக்கடன்
பெற்லாம் என்று ஒரு வங்கிக்கு நானும் எனது மகனும்
மகனும் சென்றோம். அந்த வங்கி மேளாலர்
ஏதோ தாந்தான் அந்த வங்கிக்கு முதலாளிபோல்
அதெல்லாம் தரமுடியாது என்று ஒரேமூச்சில்
முடித்துவிட்டார். நாங்கள் இருவரும் அவர் காலில்
விழாதகுறையாக வேண்டிப்பார்த்துவிட்டோம்.
அவர் மசிவதாக இல்லை.
வேறு வழியின்றி , தலைகுனிந்து
வெளியேறினோம்.
பின்னர் வெறு ஒரு வங்கியில் சென்று( அதுவும்
ஒரு நண்பரின் சிபாரிசின் பேரில்) வேண்டினோம்.
அவர்கள் பரவாயில்லை. மொத்தக்கடனே ரூ.
96,000/- தான்.(ஆண்டிற்கு 24,000/-) . அதற்கு
ஒவ்வொரு ஆண்டும் ரூ.5000/- க்கு சேமிப்பு
ரூ.1,00,000/- க்கு ஆயுள் காப்பீடு, மேலும்
முதலாண்டு ரூ.24,000/-க்கு வட்டி, எல்லாம்
சேர்த்து கணக்கிட்டால் எங்கோ செல்லும்.
எனவே முத்லாண்டு மட்டும் கடன் பெற்று,
அடுத்த ஆண்டு முத்ல் கடன் பெறாமல்
விட்டுவிட்டேன்.
முதல் ஆண்டு ரூ.24,000/-க்கு செலவு ரூ.11,000/-.
இரண்டாம் ஆண்டு ரூ.14,000/-, மூன்றாம் ஆண்டு
ரூ.17,000/-, நான்காம் ஆண்டு ரூ.21,000/-.
இது கடனா, கந்து வட்டியா?
இதுதான் நம் நாட்டு பொதுத்துறை வங்கிகள்
.மக்களுக்கு சேவை செய்யும் நிலை.
ஒரு அரசு ஊழியனான எனக்கே இந்த கதி
என்றால்,மற்றவர்களின் நிலை, பாவம்
நம் இந்திய குடிமக்கள்.

Thursday, November 12, 2009

மதுவும் தமிழ்நாடும்

நான்1952 ல் பிறந்தவன். அப்போதெல்லாம்
மது என்றால் யாருக்கும் என்னவென்றே
தெரியாது. பெண்கள் குழ்ந்தை பெற்றால்,
ரகசியமாக பிஸ்கட் பிராந்தி என்று
வாங்கி வந்து, மிக மறைவாக வைத்து
அவர்களுக்கு கொடுப்பார்கள். மேலும்
ஆயுர்வேத கம்பெனிகள் தயாரிக்கும்
ஏதோ ஒரு மருந்தில் அதிக ஆல்கஹால்
உள்ள ஒன்றை, கடைக்கார்ர்கள்
விற்பார்கள்.ஆண்கள் அதை வாங்கிப் பருகி
தங்களின் மது ஆசையை தீர்த்துக்
கொள்வார்கள்.மேலும் கிராமத்தில்
யார்ரவது ராணுவத்தில் இருந்தால்,
அவர்கள் ஊருக்கு வரும்போது
கொண்டு வரும் மது குப்பிக்ச்ளுக்காக
ஒரு கூட்டம் காத்திருக்கும்.
பாண்டி, மற்றும் காரைக்காலை சுற்றி உள்ள
மாவட்டங்களை சேர்ந்தவர்கள்
அங்கு சென்று தங்களின் “தாகசாந்தியை”
தீர்த்துக்கொள்வார்கள். முதன் முதலாக
1973 ல் கருணாநிதி ஆட்சி காலதில் தான்
தமிநாட்டில் மது மக்களுக்கு
அறிமுகம் செய்யப்பட்ட்து. இன்று
எல்லா வயதினரையும் ஆட்டிப்
படைக்கும் அளவிற்கு மது சமூகத்தில்
கலந்து விட்ட்து. பின்னர் வந்த
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியவர்களுக்கும் அதை
தடுக்கும் அள்விற்கு எண்ணம் ஏற்படவில்லை.
இன்று ஒரு சமுதாயத்தையே “குடிகார”
சமுதாயமாக மற்றிய பெருமை கருணாநிதி
அவர்களையே சேரும்!
இது தான் இன்று, கள் இறக்க அனுமதி கோரி
போராட்டம் நடத்தும் அள்விற்கு வந்துவிட்ட்து
!

Wednesday, November 4, 2009


புரியவில்லை
அடிக்கடிசலித்துக்கொள்கறாய்
’உங்களை கட்டிகொண்டு
என்ன சுகம் கண்டேன்.’


எதை வாங்கிக்கொடுத்தாலும்
குறை காண்கிறாய்
எதெற்கெடுத்தாலும்
சினம் கொள்கிறாய்


உணவு உடை உறைவிடம்
உறுதிசெய்யப்பட்டிருந்தாலும்
அடுத்தவர் வாழ்வே
உயர்வாகத்தெரிகிறது - உனக்கு


பல ஆண்டுகள்
பொறுமையாயிருந்தும்
விட்டுக்கொடுத்தும்
அனுசரித்துபோயும்
புகைப்படங்களில் மட்டுமே
மகிழ்ச்சியாய் இருக்கிறோம்
நீயும் நானும்-புன்னகையோடு


இறுதிவரை
உன் அன்பை என்னால்
புரிந்துகொள்ளமுடியவில்லை
இனியும் புரிந்துகொள்ள முடியாது


சுற்றி இருப்பவர்கள் முன்
நீ கதறி ஒப்பாரி வைக்கும்போது
நான் சவமாய்!