செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Friday, October 1, 2010

Thursday, September 30, 2010






11
வலியது வெல்லும்


அன்று என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான ஒரு நாள். L.I.C. வேலை என்றால் சும்மாவா? அனுமதி கடிதத்தை எடுத்துக்கொண்டு அண்ணாசாலையில் உள்ள அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு என்னைப்போல் பலர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சற்று பருமனாகவும், கண்ணாடி அணிந்துகொண்டும் தனியாக நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன், அவரிடம் பேசவேண்டும்போல் ஒரு ஆவல் ஏற்பட்டது. அவர் அருகில் சென்று மெதுவாக் “சார், நீங்களும் இங்கு வேலைக்கு வந்திருக்கிறீர்களா?” என்றேன். அவர் ஆமாம் என்றார். பிறகு அவர் வீடு பார்த்தசாரதி கோயில் பக்கம் என்று தெரிந்துகொண்டேன். நான் இருப்பது லாயிட்ஸ் சாலையில். இரண்டும் பக்கம்தான். ஆனால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. லாயிட்ஸ் சாலை மீனவர்களும், இஸ்லாமியர்களும், ஏழ்மையில் உள்ளவர்களும் வாழும் பகுதி. பார்த்தசாரதி கோயில் பக்கம் என்றால், பிராமனர்களும், வசதி படைத்தோரும் வாழும் பகுதி. ஆனால் இரண்டும் திருவல்லிக்கேணிதான். இரண்டுக்கும் பின்கோட் 600005 தான். சங்கராச்சாரியார் வந்தால் அயிஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள வசந்த மண்டபம் என்ற இடத்தில் தங்குவார். எல்லோரும் அவரைப்பார்கக்ச் செல்வார்கள். அவர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளவர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த்ப்பக்கம் உள்ள மீனவர்கள் மற்றும் உள்ள ஏழைகள் அவரை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அவரைப்பற்றி ஏதும் தெரியாது. அவரும் அவஎகளை கண்டுகொள்ளமாட்டார். ஏனென்றால் அவர்கள் சூத்திரர்கள். இரு பகுதிகளும் ஒரே தொகுதி, ஒரே பின்கோட், ஒரே வார்டு, ஆனால் இன்றைக்கும் சென்று பாருங்கள்,வித்தியாசம் தனியாகத்தெரியும்.
இருவரும் நண்பர்களானோம். அவர் பிராமனர், நான் வேறு சாதி. அவர் இருப்பது நகரத்தின் மிக பிரசித்தமான பகுதி. நான் இருப்பது மீனவர் குப்பம். அதையேல்லம் மீறி எங்களின் நட்பு வளர்ந்தது. இருவரும் எல்.ஜ. சி யில் சேர்ந்து பணிபுரிந்தோம்.
நாள்தோறும் இருவரும் வீட்டில் இருந்து நடந்தே அலுவலகம் செல்ல்வோம். பேருந்துக் கட்டணம் 10 பைசாதான். ஆனால் பேசிக்கொண்டே நடந்து செல்வதில் உள்ள மகிழ்ச்சி அதில் கிடைக்காத்ல்லவா/ அதற்காகத்தான். அலுவலகம் முடிந்தவுடன் மாலையில் தினமும் கடற்கரை சென்று மாலைப்பொழுதை இனிமையாககழித்து மகிழ்வோம்.. பின்னர் ஒரு சமயம் இருவரும் தபால் அலுவலகத்திற்கு வேலைக்கு மனு செய்தோம். அன்று மனு சமர்ப்பிக்க கடைசிநாள். நான் நேராக அண்ணாசாலை அஞசல்அகத்திற்கு சென்று மனுவை சமர்ப்பித்துவிட்டு பின்னர் அலவலகம் சென்றேன். அவர் (பெயர் இராம சுப்ரமணியன்) அலுவலகம் சென்று கையெழுத்து போட்டுவிட்டு, அனுமதிவாங்கிக்கொண்டு அஞ்சல்கம் சென்று மனுவை சமர்ப்பித்தார். அதில்தான் என் வாழ்க்கை த்டம் புரண்டது. அவசச்ரத்தில் நான் மனுவை பூர்த்திசெய்து கையொப்பமிடாமல் சமர்ப்பித்துவிட்டேன். எனவே நண்பருக்கு அந்தவேலை கிடைத்தது. எனது மனு நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் எங்களின் நட்பு மாறவில்லை.




நகைச்சுவை

ஒரு காட்டில் யானை ஒன்று குளத்தில் குளித்துக்கொண்டிருந்தது. அப்பொது ஒரு எலி குளக்கரையில் வந்து நின்று யானையைப் பார்த்து அதிகாரமாக “மேலே வா” என்றது. யானை சிறிது நேரம் யோசித்துவிட்டு, சரி போகிறான், என்னவென்றுதான் பார்ப்போமே என்று நினத்து, மெதுவாக எழுந்து கரைக்கு வந்து “என்ன விசயம்” என்று அதட்டலாக கேட்டது. ஆனால் அந்த எலி ஏதும் கூறாமல், யானையை சுற்றி சுற்றி வந்து பார்த்தது. பிறகு “சரி நீ போய் குளி” என்றது. யானைக்கு பயங்கர கோபம். ”என்ன நீ பாட்டுக்கு வந்தாய், மேலேவா என்றாய், பிறகு போ என்கிறாய், என்ன வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட்டாயா?” என்றது. அத்ற்கு அந்த எலி அசராமல், ”நான் ஒன்றும் உன்னை சும்மா தொந்தரவு செய்யவில்லை, நேற்று எனது ஜட்டியை காயப்போட்டிருந்தேன்,
அதைக் காணவில்லை, நீ எடுத்து போட்டுக்கொண்டாயோ என்று பார்த்தேன்” என்றது.

Monday, September 27, 2010

commenwealthgames

காமன் வெல்த் விளையட்டுகள்</span>
னக்கு ஒன்று புரியவில்லை, நமது நாடு சுதந்திரநாடா? அடிமை நாடா?. இன்னும் எதற்கு ஆங்கிலேயர்களின் அடிவருடவேண்டும். அறுபது ஆண்டுகளுக்குபிறகும் நம்முடைய அடிமைத்தனத்தை விடமுடியவில்லை. நம் நாட்டின் ஒரு மாநிலத்தின் அளவுகூட இல்லாத நட்டிற்கு, நாம் எதற்காக இன்னும் விட்டுக்கொடுக்கவேண்டும். உடனடியாக நாம் இந்த காமன் வெல்த் அமைப்பில் இருந்து வெளியேறவேண்டும். இல்லையென்றால் நாம் இன்னும் அவர்களுக்கு அடிமைகள்தான் என்பது உறுதியாகிறது. இது நம் நாட்டின் நூறு கோடி மக்களுக்கும் அவமானமாகும். இந்த விளையாட்டை சார்லஸ்தான் ஆரம்பித்துவைக்கவேண்டும் என்றால் அதைவிட மீண்டும் நம் நாட்டை ஆளும் உரிமையை அவர்களிடமே கொடுத்துவிடலாம்.அவர்கள் என்ன நாம் கேட்டவுடன் நாட்டை நம்மிடம் கொடுத்துவிட்டார்களா?. எத்தனை உயிர்பலி எவ்வளவு போராட்டம். சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த எனக்கே இவ்வளவு ரத்தம் கொதிக்கிறது என்றால், நம் தலைவர்கள் இருந்தால் அவர்களின் மனம் எவ்வளவு கொதிக்கும்? ஆயிரம் குறைகள் நம்மிடம் இருக்கலாம் ஆனால் அதைவத்து அடுத்தவர் விளையாட இடம் கொடுக்கக்கூடாது. உடனடியாக நாம் காமன்வெல்த் அமப்பில் இருந்து வெளியேறவேண்டும். அது ஒன்றுதான் நம் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு செய்யும் மிகச்சிறந்த மரியாதையாகும்!

Sunday, September 19, 2010

10

வலியது வெல்லும்

ஒருமுறை ஏதோ விசயமாக மதுரையில், அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன். காலை ஏழு மணி இருக்கும், காபியையும், பேப்பரையும் ஒருசேர ரசித்து விழுங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் வந்தார். அக்காவை மாமி என்று அழைத்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் பேச்சு முடிந்ததும் அக்கா என்னிடம், “இவர் நமது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் வீட்டு பையன், இப்போ மெட்ராசில் (சென்னை) சட்டம் படிக்கிறார். நானும் அவரிடம் என்னைப்பற்றி கூறினேன். இருவரும் விலாசங்களை பரிமாறிக்கொண்டோம். அவர்து பெயர் சுல்தான் அலாவுதீன் என்று தெரிந்துகொண்டேன். மாமா வீட்டில் இருந்தால், அப்பொதெல்லாம் பயம். அளவுக்கு அதிகமாக பேசமாட்டோம். ஏதோ ரிங்மாஸ்டரைப் பார்த்த விலங்குகள்போல் அமைதியாக இருப்போம். அவ்வளவு மரியாதை. அவர் அப்போது தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக(revenue inspector) இருந்தார். பின்னர் தாசில்தாராக ஓய்வு பெற்றார். நான் சின்னப் பையன் என்பதால், பையை கொடுத்து ஆட்டுகறி மற்றும் காய்கறிகளை என்னத்தான் வாங்கிவரச்சொல்வார்கள். மாமாவுக்கு ஒரு தங்கை. என்னைவிட வயதில் மூத்தவர். கல்லூரி முடித்து வீட்டில் இருந்தார். படிப்பே இல்லாத ஒருவரை காதல் திருமணம் செய்து, மூன்றாவது பிரசவத்தின்போது இறந்துவிட்டார். அதை முடித்து நான் சென்னை திரும்பினேன்.

சிலநாட்களுக்குப்பிறகு, புதிய ந்ண்பரை சந்திக்க சென்றேன். அவர் சூளை பகுதியில் த்ன் ந்ண்பருடன் அறை எடுத்து த்ங்கி இருந்தார். அந்த ந்ண்பர் பாடியில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.எல்லோரும் அறிமுகம் செய்துகொண்டோம். அவர் பெயர் நாரயணமூர்த்தி. இவரது உதவியால்தான், அலாவுதீன் சட்டம் படிக்கிறார் என்பதை உணர்ந்தேன். அலாவுதீனின் வாப்பா(அப்பா), காவல்துறையில் த்லைமை காவலராக இருந்தார். அவர் வேறு ஒரு பெண்ணை மணந்துகொண்டு தனியாக இருந்தார். சூளையில் இருந்து சட்டக் கல்லூரி (பாரிமுனை) செல்ல பேருந்துக்குக்கூட காசில்லாமல் (பதினைந்து பைசா) நடந்து செல்வார்.அப்போது நானும் பலமுறை அவருடன் சென்றுள்ளேன். அது மட்டுமல்ல. பல நாட்கள் அவருடன் வகுப்புகள் இருந்து பாடம் கேட்டுள்ளேன் அவருடைய நிலைகண்டு நானும் உதவ ஆரம்பித்தேன். இந்த நட்பு வட்டத்தில் எனது அண்ணனும் சேர்ந்தார். வட்டம் பெரிதாகி ஒரு நிலயில் 15 பேர் வரை உயர்ந்தது. நாங்கள் தினசரி கடற்கரையில் சந்திக்க ஆரம்பித்தோம். ஒருவருடம் நாங்கள். 365 நாட்களும் கடற்கரையில் சந்தித்துள்ளோம். பெரும்பாலும் புகாரி ஓட்டல் பின்புறம் உள்ள மணலில்தான் அமருவோம். அங்குதான் வியாபரிகளின் தொல்லை இருக்காது. அந்த வட்டத்தில் வேலை செய்பவர், படிப்பவர், வேலை இல்லாதவர் என எல்லோரும் சமமாக பழகி வந்தோம். அவர்களில் ஒருவர்தான், நாடக எழுத்தாளராக ஆகி, பின்னர் வேதம்புதிது ப்டத்திற்கு கதை வசனம் எழுதி, அதனால் தனது டிவிஎஸ் வேலையை இழந்து தற்போது வேத்ம்புதிது கண்ணனாக இன்று திரை உலகத்தில் இருப்பவர். அப்போது எனக்கு L.I.C.யில் வேலை கிடைத்தது.

Tuesday, September 14, 2010

9

நான் அப்போது எந்த வேலையிலும் இல்லாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் பத்திரிக்கை உலகம் என்னை அழைத்தது. முதன்முதலில் “மினி ஸ்டார்” என்று ஒரு திரைப்பட பத்திரிக்கையில் பணி புரியும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் ஆசிரியர் மற்றும் முத்லாளி திரு “ஜாசன்” என்பவர். அவர் அப்போது சென்னை ஆவனக்காப்பகத்தில் பணி புரிந்தார். அவர் துணைவியார் வேறு ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரிந்தார். திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் அவர்களின் வீடு.. அதிலேயே அலுவலகம்.. அவர் காலையில் நான் செய்யவேண்டிய வேலைகளை என்னிடம் சொல்லிவிட்டு அலுவலகம் செல்வார். நான் பத்திரிக்கைக்கு வேண்டிய விசயங்களை சேகரித்து, அவற்றை ஒருங்கிணைத்து அச்சகம் கொண்டு செல்லவேண்டும்.இப்போதுபோல் இல்லை,மொத்த செய்திகளையும் சேகரித்துக்கொண்டு, தேவையான படங்கள் மற்றும் தலைப்புகளை முதலில் ஒரு ஓவியரிடம் கொடுத்து நமது கற்பனைக்கு ஏற்றவாறு டிசைன் செய்து, அதனை அவர் வரைந்துகொண்டு வந்தபிறகு, அவற்றை ”பிளாக்மேக்கர்” இடம் கொடுத்து அவற்றை பிளாக் செய்து,எல்லாவற்றையும் அச்சகத்தில் தலைமை அச்சுகோர்ப்பாளரிடம் சேர்த்துவிட்டு, மேலும் தேவையான அதிகப்படியான விசயங்களையும் எடுத்துக்கொண்டு அச்சகம் செல்லவேண்டும்.. அங்கு அவர்கள் அச்சுகோர்த்த பக்கங்களை கை அச்சில் பதிந்து தருவார்கள். அந்த பக்கங்களை பிழை திருத்தி மீண்டும் மீண்டும் சரிபார்த்து, அன்று அச்சுகோர்த்த பக்கங்களை எடுத்துக்கொண்டு இரவு எந்நேரமானாலும் ஆசிரியரிடம் சென்று அவற்றை கொடுத்துவிட்டுத்தான் வீட்டிற்கு செல்லவேண்டும். அப்போதுதான் அவர் அந்த பக்கங்களை சரிபார்த்து, மறுநாள் காலை என்னிடம் கொடுத்து அவற்றை அச்சில் ஏற்ற அனுமதிப்பார். அவற்றை நான் அச்சகத்தில் கொடுத்து அச்சில் ஏற்ற சொல்லவேண்டும். பின்னர் மீண்டும் அடுத்தடுத்த பக்கங்களை அவ்வாறே செய்யவேண்டும். இதற்கிடையில், நாம் கொண்டுவந்த செய்திகள் பக்கங்களை நிரப்ப போதவில்லையென்றால் நாமாகவோ அல்லது அங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்து செய்திகளை மொழிபெயர்த்தோ நிரப்பவேண்டும். சிவகாசியில் இருந்து அட்டை வண்ணத்தில் அச்சடித்து தயாராக வந்துவிடும். அதையும் அச்சகத்தில் கொடுத்துவிட்டால், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து புத்தகமாக கொடுத்துவிடுவார்கள். அது ஒரு மாத பத்திரிக்கை , மாதத்திற்கு 10,000 முத்ல் 15,000 வரை அச்சடிப்போம். மேலும் அந்த பிரதிகளை அலுவலகம் கொண்டுவந்து இரயில் மற்றும் தபால் மூலம் அனுப்ப, பண்டல்களாக கட்டியெடுத்து இரயில், தபால் அலுவலகங்களுக்கு சென்று அவற்றை அனுப்பிவிட்டு வந்து அலுவலகத்தில் அமர்ந்தவுடன் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அத்ற்கு ஈடு இணையே இல்லை. எனக்கு அப்போது சம்பளம் வாரம் 50 ரூபாய். அச்சகத்தில் வேளை முடிந்தவுடன் மாதாமாதம் 50 ரூபாய் கொடுப்பார்கள். ஒரு அடையாள அட்டை பத்திரிக்கையாளர் சங்கத்தில் கொடுப்பார்கள். அதன்மூலம் நாம் புதிய படங்களின் “பிரிவியு” மற்றும் நடிகர்கள், திரைப்பட பிரபலங்களை பேட்டி எடுப்பது போன்ற பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய படங்கள் வந்தால், அவற்றைப்பார்த்து நாம்தான் விமரிசனம் எழுதவேண்டும். அக்காலத்தில், கமலஹாசன், ஜெய சித்ரா, ஜெயசுதா, போன்றவர்களை பேட்டி எடுத்துள்ளேன். இதனால் இன்னொரு பலன் கிடைத்தது. அது பல இலக்கியங்களை படிக்க நல்ல திரைப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் ஆகியன.

Wednesday, September 8, 2010

8
ஸ்கார்னர்! சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்று. அக்காலத்தில் நாங்கள் காலை 7 ம்ணிக்கே லாட்டரி வியாபாரத்தை ஆரம்பித்துவிடுவோம். மக்கள் வரிசையில் நின்று வாங்குவார்கள். ஏனென்றால் எல்லோருக்கும் லட்சாதிபதி ஆகவேண்டும் என்கிற அவா!. காலை 10 மணிக்குள் மூவரும் சேர்ந்து ரூ.300 முதல் ரூ.400 வரை வியாபாரம் செய்துவிடுவோம். அண்ணன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, திருவல்லிக்கேணியில் உள்ள மொத்த வியாபாரியிடம் சென்று சீட்டுகளை வாங்கிவருவார். மாலை வியாபாரியிடம் கணக்கை ஒப்படைத்தபின்பு மீதமுள்ள தொகையை நங்கள் மூவரும் பங்கிட்டுக்கொள்வோம். ( இது தவறு என்று அப்போது தெரியவில்லை)ஒரு பங்கை நண்பருக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ள இரண்டு பங்கை அண்ணன் வீட்டிற்கு கொண்டுவருவார். பின்னர் அண்ணன் துறைமுகத்தில் பணிபுரிபவர்களின் உத்வியோடு அங்கு தற்காலிக பணியில் சேர்ந்தார். அங்கு கப்பல்கள் குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தப்பட்டுவிடும். அங்கிருந்து சிறிய படகுகளின் உதவியோடு துறைமுகத்தின் உள்ளே இழுத்து வருவார்கள். அந்த சிறிய படகில்தான் அண்ணனுக்கு வேலை. அதில் உள்ள கனமான கயிறுகளை பயன்படுத்துவதால், பழக்கமில்லாத கைகளில் வரிவரியாக இரத்த காயங்கள். அதைப்பார்த்து அம்மா கோழியிறகால் எண்ணை த்டவிக்கொண்டே கண்ணீர் விடுவார்கள். அதைப்பார்த்து நாங்களும் கண் கலங்குவோம். இந்த நேரத்தில்தான் அப்பாவுக்கு ”முசிறிபுத்தன்” அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பா அவருடைய பேட்டரி பிரிவில் பணிபுரியும் 20 பேர்களை வேலை வாங்கும் மேலாளராக சேர்ந்தார். அங்கு பழைய கார், லாரி பேட்டரிகளை விலைக்கு வாங்கி அதை பிரித்து அதிலுள்ள ஈயத்தை பிரித்தெடுத்து, EXIDE, AMCO போன்ற நிறுவனங்களுக்கு விற்பது மற்றும், மின் கலன்களுக்கான NEGATIVE, POSSITIVE பிளேட்டுகளை தயாரித்து அனுப்புவது ஆகிய வேலைகள் நடந்துவந்தன. ஆனால் அங்கு பணிபுரிந்ததன் காரணமாக, அவர் அங்கிருந்த இரசாயனங்களை சுவாசித்து விரைவில் உடல்நலமிழந்தார். அதற்கு முன்பாகவே முசிறிபுத்தன் அவர்களிடம் அண்ணனைப்பற்றி சொல்லி வைத்துள்ளார். அந்த் நேரத்தில் அவருக்கும், தான் நடத்திக்கொண்டிருந்த “அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற” த்திற்கு அலுவலகத்தை பார்த்துக்கொள்ள நல்ல ஒரு ஆள் தேவைப்பட்டுள்ளது. உடனே அண்ணனை வரச்சொல்லி, அவரின் கையெழுத்து எவ்வாறு உள்ளது என்று பார்த்து, உடனே மன்றத்தின் அலுவலக பொறுப்பாளராக நியமித்துவிட்டார்.
அது முதல் வாழ்க்கையில் கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது.

Sunday, September 5, 2010

7

ருவாறாக நானும் அப்பாவும் லாரியைப் பிடித்து சென்னைக்கு 68 ஆக்ஸ்ட் 15 அன்று வந்து சேர்ந்தோம். கோடம்பாக்கத்தில், அப்பாவின் நண்பரின் வீட்டில் (ஒரு அறை, ஒரு அடுப்படி) தங்கினோம். அன்று மாலை அன்றைய முதல்வர் அண்ணா அவர்கள் பேசிய கூட்டத்திற்கு அப்பா அழைத்து சென்றார். இரண்டு நாட்கள் என்னை விட்டுவிட்டு அப்பா மட்டும் வெளியில் சென்றுவந்தார். மூன்றாம் நாள் என்னை அழைத்துக்கொண்டு மவுண்ட் ரோட் (த்ற்போதய அண்ணா சாலை) அகூர்சந் கட்டிடத்தில் (காயிதேமில்லத் கல்லூரி எதிரில் உள்ள சிவப்பு கட்டிடம்) உள்ள ரேடியோ கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டர். ஒரு நாளைக்கு மூன்று ரூபாய் சம்பளம். காலை பத்துமணிக்கு சென்றால் இரவு 9 மணி ஆகும். ஒரு ரூபாய் தினசரி பேட்டா. அதில்தான் என்னுடைய காலை ம்ற்றும் பகல் உணவை பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போது அது ஒன்றும் பெரிய விசயமில்லை. ஒரு இட்லி 5 பைசா, தோசை 15பைசா. காபி 10 பைசா. இந்த விலை உடுப்பி ஓட்டலில். அப்போது எல்லோருமே உடுப்பி ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள். அந்த ஒரு ரூபாயிலும் மீதி இருக்கும். அதை சேர்த்துவைத்து ஞாயிற்று கிழமைகளில் திரைப்படம் பார்ப்பேன். திரைப்படம் பார்க்க 60 பைசா அல்லது 80 பைசா இருந்தால் போதும். அப்பா ராயப்பேட்டையில் இருந்த ஒரு அப்பள கம்பெனியில், பாக்கட்டுகளை சைக்கிளில் சென்று கடைகளுக்கு விநியோகிக்கும் வேளையில் சேர்ந்தார். நானும் அவரும் அந்த கம்பெனியில் தங்கிக்கொள்ள அனுமதி பெற்றார். முதல்நாள் காலை எனக்கு டிபன் வாங்கிக்கொடுத்து, கடையில் விட்டு சென்றார். திரும்ப வரும் வழியையும் சொல்லிக்கொடுத்தார். இரவு 9 மணிக்கு நான் கடையில் இருந்து புறப்பட்டு அங்கு சென்றேன். இரவு உணவு அங்குதான். முகம் கழுவி சாப்பிட உட்கார்ந்தேன். ஒரு அலிமினிய தட்டில் குவியலாக சோறும், அதன்மேல் சிறிய கிண்ணத்தில், ஒரு பெரிய துண்டு மீனுடன் குழம்பும் இருந்தது. நான் ஓ வென்று அழ ஆரம்பித்துவிட்டேன். ஏனென்றால், நான் அதுவரை மீன் குழம்பு சாப்பிட்டதில்லை. அன்று இரவு எப்படியோ கழிந்தது. நாட்கள் நகர்ந்தன. ஊரில் நான் கணித்தில் அதி மதிப்பெண் (96/100) பெற்றதற்காக, பள்ளியில் விழா நடத்தி பரிசுகள் வழங்கி உள்ளனர். நான் அங்கு இல்லாததால் அம்மா மேடையேறி அந்த பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அப்பொதெல்லாம் அஞசல் அட்டைதான் தொடர்பு சாதனம். செய்தி வந்துசேர ஒருவாரம் ஆகும். அவசர செய்தி என்றால், அஞ்சல் அலுவலகம் சென்று ‘டிர்ங்கால் புக் செய்து காத்திருக்க வேண்டும். (அதுவும் நம் ஊரில் அஞ்சல் அலுவலகம் இருக்கவேண்டும், அல்லது யார் வீட்டிலாவது தொலைபேசி இருக்கவேண்டும். அப்போதுதான் தொடர்புகொள்ள முடியும்.) தொடர்பு கிடைத்தவுடன் சப்தமாக பேசவேண்டும். ரகசியமான விசயங்களைப் பேச முடியாது. பின்னர். நடுகுப்பம்.(லாயிட்ஸ் சாலை கடற்கரை முனை) பகுதியில் மாதம் 40 ரூபாய் வாடகைக்கு (கழிவறை கிடையாது. குளியல் அறை மட்டும் உண்டு.) ஒரு வீட்டை ஏற்பாடு செய்தார். அம்மா, அண்ணன் தங்கை மூவரும் வந்துசேர்ந்தார்கள். அதன் பின்னர் நான் வேலை செய்த கடை பிடிக்காமல். அப்பாவின் பழைய ந்ண்பரின், வெலிங்டன் திரை அரங்கின் முன்னால் இருந்த ஜெய்சி பிரத்ர்ஸ்’ என்ற பல்பொருள் கடையில் சேர்த்துவிட்டார். அண்ணன் லாட்டரி சீட்டு கடை நடத்தும் ஒருவரிடம், வேலைக்கு சேர்ந்தார்.

அவருக்கு மூன்றரை ரூபாய் சம்பளம். அனால், ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்தால் சொந்தமாக கடை வைக்கலாம். ஆனால் அதற்கு வழி தெரியவில்லை. லஸ் கார்னரில் அவர் கடை. கடை என்றால் ஏதோ என்று நினைக்க வேண்டாம். ஒரு சிறிய பிளைவுட் ஸ்டாண்ட், கொஞ்சம் பேபர் கிளிப்புகள். சாலையோர நடைபாதையில்தான் கடை. பின்னர் நான், ம்ற்றும் ந்ண்பர் ஒருவர் ஆக மூன்றுபேர் அங்கு சேர்ந்தோம்.

Friday, August 27, 2010

6
ன்னுடய படிப்பு என்பது எஸ்.எஸ்.எல்.சி யுடன் முடிவுக்கு வந்தது. தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே, ஒரு நாள் இரவு
சாப்பிடும்போது, அம்மா சொன்னார்கள்,”எப்படியோ படிக்கவைத்துவிட்டோம். இதற்குமேல் குடும்ப நிலைமை, உங்களை (என்னையும் ,அண்ணனையும்) படிக்கவைப்பதற்கு ஏற்றதாக இல்லை. அவனும்(அண்ணன்) படித்துவிட்டு ஊர் சுற்றுகிறான். நீயும் அவ்வாறு கெட்டுப்போகக்கூடாது. எனவே
நாளை நீயும் நயினாவும்(அப்பா) சென்னை செல்கிறீர்கள்”.என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.” நானும் அண்ணனும், நீங்கள்சென்று வீடு போன்றவற்றை ஏற்பாடு செய்தபிற்கு வருகிறோம்.. நீ ந்யினா சொல்வதுபோல் கேட்டு நடக்கவேண்டும்.. ”என்று அறிவுரை கூறினார்கள். இந்த இடத்தில் ஒன்றைக் சொல்ல வேண்டும். எங்கள் அக்காவீட்டில் அண்ணனை கல்லூரியில் படிக்கவைப்பதற்கு, (அம்மா பணம் கொடுக்கிறோம் என்று சொல்லியும்கூட) மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் காலை நானும் அப்பாவும் நகை ஒன்றை எடுத்துக்கொண்டு, அதை அடமானம் வைத்து பணம் பெறுவதற்காக சைக்கிளில் சோழவந்தானுக்கு சென்றோம்..எங்கள் ஊரிலிருந்து சோழவந்தான் 5 மைல் இருக்கும். நீரேத்தான் என்ற இடம்வரை நெடுஞசாலை, பின்னர் சாலை மிகவும் குறுகலாக இருக்கும்(இன்றும் அப்படித்தான் உள்ளது.) அப்பாதான் சைக்கிளை ஓட்டினார். நீரேத்தானிலிருந்து சோழவந்தான்வரை சாலை தலைகீழாக இருக்கும்.. நாம் பெடலை மிதிக்க வேண்டியதில்லை, பிரேக்கைத்தான் பிடிக்கவேண்டும். அவ்வாறு செல்லும்போது, எங்களுக்கு முன்னால் ஒரு காலியான மாட்டுவண்டி சென்றுகொண்டிருந்தது. எதிரே மதுரை செல்லும் சுதந்திரம் டிரான்ஸ்போர்ட்பேருந்து வந்தது. அப்பாவால் சமாளிக்கமுடியாமல், மாட்டுவண்டிக்கு இடதுபுறமாக சைக்கிளை ஒதுக்கினார். தடுமாறியதில் இருவரும் சைக்கிளோடு வாய்க்காலில் விழுந்தோம். நான் வாய்க்கால் பள்ளத்தில் இருந்து தலையை தூக்கி பார்த்தபோது, மாட்டின் பின் காலுக்கும், வண்டியின் சக்கரத்திற்கும் நடுவில் அப்பா விழுந்தார். வண்டியின் சக்கரம் அப்பாவின்மேல் ஏறி இறங்கியது. அந்த வண்டி பாரம் ஏற்றபடாத்தாலும், அப்பாவின் இடுப்பு எலும்புகளின்மேல் ஏறி இறங்கியதாலும் அவருக்கு அதிகமான பாதிப்பு ஏற்படவில்லை.
சிறுவயது என்பதால் என்னால் அழுவதைத்தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த மாட்டுவண்டியிலேயே மயக்கமுற்ற அவரை படுக்கவைத்து, அழுதுகொண்டே சைக்கிளை த்ள்ளிக்கொண்டு பின்னால் சென்றேன். சோழவந்தானில், அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். அதற்குள் எங்கள் வீட்டிலிருந்து, அண்ணன் வந்துவிட்டார். அண்ணனும், அப்பாவும் பேருந்தில் ஊருக்கு சென்றார்கள். நான் சைக்கிளில் சென்றேன். அப்பாவால் ஒரு மாதம் வரையில் எழுந்து நடக்க முடியவில்லை. அப்போது எங்களின் உறவினர் ஒருவர் ராணுவத்தில் இருந்து வந்திருந்தார்.
அவர் அப்பாவிற்கு, வலி தெரியாமல் இருக்க மது குப்பி ஒன்றை கொடுத்துவிட்டுப் போனார். அப்போதுதான் மது என்கிற பொருளைப்பற்றி தெரிந்துகொண்டேன். அதுவும் எதோ ஒரு மருந்து என்ற அளவில்தான். ஆனால் அதன்பிறகு, இறக்கும் வரை அவருக்கு அந்தவிபத்தினாலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. எனவே நாங்கள் சென்னை செல்வது தாமதமாகியது.

ஒருமுறை எனது அம்மா, உறவினர் ஒருவரிடம் சென்று ஐம்பது ரூபாய்(1960களில் 50 ரூபாய் என்பது பெரிய தொகை) கடனாக கேட்டுள்ளார். அத்ற்கு அவர் “நாளை வா தருகிறேன்” என்று கூறி உள்ளார். சரியென்று அம்மாவும் அவருடைய வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.அப்போது அவர் தனது மனைவியிடம் ”இவர்களுக்கெல்லாம் கேட்டவுடன் கொடுத்தால் பணத்தின் அருமை தெரியாது. இரண்டு தடவை அலையவிட்டு கொடுத்தால்தான் தெரியும் என்று கூறியுள்ளார். இது அம்மாவின் காதில் விழுந்துள்ளதும் அன்றிலிருந்து அவர்கள் யாரிடமும் கடன் கேட்பது இல்லை. அதேபோல் நாங்கள், எங்களின் பாட்டி (அம்மாவுடைய அம்மா) வீட்டில் தான் இருந்தோம். மாமாவுக்கு இவர்கள் எங்கே இந்தவீட்டிலேயே த்ங்கிவிடப்போகிறார்கள் என்று
சந்தேகம்.. பல சமயங்களில். அந்தவீட்டில் ஒரு அறையில், கதவை பூட்டிவிட்டு, சுவற்றின் மேல்புறத்தில் ஒரு துளையின் வழியாக,தொட்டியில் நீரை ஊற்றுவதுபோல் நெல்லைக் கொட்டிவிடுவார்கள். அதேவீட்டில் நாங்கள் உணவின்றி பசியோடு
இருப்போம். அவர்தான் எங்களின் தாய்மாமன். பின்னர் ஒருநாள் எங்களை அந்த வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார். அனால் அவர் பாட்டிக்கு ஏதும் கொடுப்பது இல்லை. அவர் எங்கள் வீட்டில்தா சாப்பிட்டார். பாட்டிக்கு அவ்வளவு சொத்துகள் இருந்தும் அவரால் மகனை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை.சொந்த ஊரிலேயே நாங்கள் வாடகைவீட்டில் குடியிருந்தோம். வாடகை மாதம் ஐந்து ரூபாய். பாட்டி இறந்தபோது அம்மா பாட்டிக்கு செய்யவேண்டிய ஆரம்ப சடங்குகளை செய்துகொண்டு இருக்கும்போது, மாமா வந்து நீங்கள் போகலாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி, வான வேடிக்கைகளுடன் பாட்டியின் இறுதி சடங்கை செய்தார். உயிருடன் இருக்கும்போது பாட்டிக்கு சோறுபோடாதவர், இறந்தவுடன் த்ற்பெருமைக்காக அவ்வாறு செய்தார். இவ்வாறான சூழ்நிலையில்தான் அம்மா எங்களை சென்னைக்கு அனுப்ப முடிவுசெய்தார்.

Thursday, August 19, 2010

ஏற்ற தாழ்வு


பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேளையாக, மதுரையில் உள்ள எனது அக்கா வீட்டிற்கு சென்றேன். அன்று மாலை அவர்கள் எல்லோரும் ,அக்கா மகனுக்கு பெண் பார்க்க புறப்பட்டார்கள். அக்கா நீயும் வாடா என்றாள். சரி என்று நானும் புறப்பட்டேன். ஒரு வாடகை கார் எடுத்துக்கொண்டு எல்லோரும் புறப்பட்டோம். பெண்ணின் வீடு பங்களா போன்று இருந்தது. எல்லோரும் உள்ளே சென்றோம். எங்களை வற்வேற்று. அமரச்செய்தார்கள். நான் அங்கு இருந்த பத்திரிக்கை ஒன்றை
எடுத்து புரட்டிகொண்டிருந்தேன். அவர்கள் மாப்பிள்ளை, பெண்ணின் படிப்பு மற்றும் வேலை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதில் ஒருவர் அக்காவிடம் ”இவர் யார்?” என்று கேட்டார். அத்ற்கு அக்கா “இவன் என் தம்பி, சென்னையில் இருக்கிறான்” என்றார்கள். அவர் உடனே அடுத்த கேள்வியை நேரடியாக என்னிடம் கேட்டார். “சென்னையில் என்ன செய்கிறீர்கள்?” என்றார். நான் சுருக்கமாக “ போக்குவரத்தில் பணிபுரிகிறேன்” என்று சொன்னேன். அவர் மீண்டும் விடுவதாக இல்லை. மேலும் எனக்கு இதுபோன்ற நிகழ்வுகள் முன்பே நடந்துள்ளது. “என்னவாக இருக்கிறீர்கள்?” என்றார். அத்ன்பிறகு நான் தயக்கமின்றி”நடத்துன்ராக இருக்கிறேன்” என்று கூறினேன்.
அப்போது அவர் முகம், நாம் வழியில் ஏதாவது அசிங்கத்தை மிதித்துவிட்டால் எப்படி மாறுமோ, அப்படி மாறியது. உண்மையில் நான்தான் அவரைப்பார்த்து அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் விற்பனைவரி அலுவலகத்தில் பணி புரிந்தார்.
அவருடைய உண்மையான வருமானத்தில் அவரால் இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி இருக்கமுடியாது. நானோ என்னுடைய உழைப்பில் கவுரவமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவன்.
இதுதான் உலகம். பின்னர் அந்த சம்பந்தம் நடைபெறவில்லை.
நான் அக்காவிடம்”இனிமேல் இம்மாதிரியான இடங்களுக்கு என்னை அழைக்காதே என்று கூறிவிட்டேன்.

Thursday, July 15, 2010

. 5. ங்கள் கிராமத்தின் அருகே மலைகள் உள்ளன என்பதை முன்பே சொல்லி இருக்கிறேன். அடுத்து எங்களின் பய்ணம் அங்குதான். முத்ல் நாளே நாங்கள் தீர்மானித்துவிடுவோம். நாளை மலைக்கு செல்வதென்று. ம்றுநாள் காலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலை உணவு உண்டுவிடுவோம். ஏனென்றால் மாலை வீடு திரும்ப நேரமாகிவிடும். காலை 8மணி அளவில் புறப்பட்டுவிடுவோம். வயல்களின் வலியாக நடந்து சென்று ஆற்றை கடக்கவேண்டும்அதற்கு(ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில்) ஆற்றின் குறுக்காக எங்கே பாலம் உள்ளது என்று பார்த்து, பின்னர் அதன் வழியாக கடந்துசெல்ல வேண்டும். இதில் ஒரு விசயம், ராமசாமி என்று ஒரு உறவுக்காரப்பையன்.அவன் எங்களுடன் பள்ளிக்கு வருவதைத்தவிர வேறு எங்கும் வரமாட்டான். நோஞ்சான், ஆனால நன்றாக படிப்பான். பள்ளியில் நான், ராமசாமி, ரத்தினம் என்று ஒரு தோழி. மூவருக்கும்தான் போட்டி. ஒரு தேர்வில் நான் அதிக மதிப்பெண் வாங்கினால் அடுத்தமுறை ராமசாமி, அல்லது அந்த ரத்தினம், இருவரில் ஒருவர் வாங்கிவிடுவார். பள்ளியைப்பற்றி பின்னர். இப்போது நாம் மலைக்குசெல்வோம். ஆற்றைக் கடந்தவுடன் மலை ஆரம்பித்துவிடும். ஆற்றைப்பார்த்தவுடன் சிலருக்கு அங்கு விளையாட வேண்டும் என்று ஆசை வந்துவிடும். அவர்களை சமாளித்து பின்னர் செல்வோம். அங்கு வழியில் குண்டுமணி செடியில் இருந்து கறுப்பும், சிவப்புமான மணிகள் கொட்டிக்கிடக்கும். அவற்றைப் பொறுக்கிக் கொள்வோம். பின்னர் அங்கு கிடைக்கும் பலவிதமான பழங்கள், காய்கள் ஆகியவற்றை பறித்து தின்றுகொண்டே செல்வோம். வெகுதூர நடை, மலையேறுத்ல் ஆகியவைகளினால் பசித்துக்கொண்டே இருக்கும். ஆற்றைக்க் கடக்கும்போது குடித்த் தண்ணீர்தான் .அதன்பிறகு மலையுச்சி சென்றால்தான் த்ண்ணீர் கிடைக்கும். கள்ளி செடிகளில் சப்பாத்திக்கள்ளி (cactus) என்று ஒருவகை. அதன் பூக்களும் மிக அழகாக இருக்கும். அதன் பழம் ரத்த சிவப்பாக இருக்கும். அதன் நடுவே நட்சத்திரம் போன்றவடிவில் முள் ஒன்று இருக்கும். அதை நீக்கிவிட்டு சாப்பிட்டால். அப்படியொரு சுவை, இனிப்பு. நம் கையெல்லாம் ரத்த் நிறமாகிவிடும். கடைசியாக மூன்றவது மலை. அது வெறும் பாறைகளினால் ஆனது, அதன்மீது ஏறுவது மிகவும் கடினம். அதில் மிகவும் முயற்சிசெய்து ஏறுவோம். அதன் உச்சியில்தான் அந்த அதிசிய சுனை உள்ளது. கோடை காலங்களில், கீழே ஊரில் உள்ள கிணறுகளில் நீர் வற்றிவிடும். ஆனால், இந்த சுனையில் நீர்மட்டம் ஒரு நூல் அளவுகூடக் குறையாது.நாங்கள் அதன் அருகே சென்று, சுற்றி அமர்ந்துகொண்டு, எங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வேகமாக அதில் உள்ள நீரை வெளியே கைகளால் அள்ளி அள்ளி ஊற்றுவோம். அந்த நீர் கிழே உள்ள பாறையில் வழிந்தோடும். ஆனால் நீரின் அளவு சிறிதுகூட குறையாது.
அங்கேயே சிறிது நேரம் விளையாடிவிட்டு. தேவையான அளவு
சுனை நீரை பருகிவிட்டு புறப்படுவோம். வரும்போது எங்களின் வயிறும், கால்சட்டை பைகளும் நிரம்பியிருக்கும். வீடுவர மாலை முடிந்து இரவு நெருங்கிவிடும். வீட்டில் ஏதேதொ சொல்லி த்ப்பித்துவிடு வோம்

Saturday, July 10, 2010

தத்துவம்
நானும் ந்ண்பர் ஒருவரும் அன்று காரில் சென்றுகொண்டிருந்தோம். அவர் எனது குடும்ப ந்ண்பர். அவர் என்னிடம் “உனது அம்மா எங்கு இருக்கிறார் “ என்று வினவினார். நானும் “ எனது த்ங்கை வீட்டில் மதுரையில் இருக்கிறார்” என்று கூறினேன்.அவர் மனதுக்குள் சிரித்துக்கொண்டு “நீங்கள் அவருக்கு பணம் அனுப்பிகிறீர்களா” என்றார். “ஆம்” என்று பெருமையாக கூறினேன். அத்ற்கு அவர் “ஒரு கதை கூறுகிறேன், கேளுங்கள்” என்று கதை சொல்ல ஆரம்பித்தார். இந்த மார்வாரிகள்(அதாவது ராஜஸ்தான் மாநிலத்தவர்) தங்களின் தாய்க்கு பணம் அனுப்பமாட்டார்கள், தங்களின் நிலத்திற்கு வேலி போடமாட்டார்கள், கொடுத்த கடனை த்ரும்பகேட்கமாட்டார்கள்” ஏன்? என்று என்னைக்கேட்டார். எனக்கு பதில் தெரியவில்லை. அவரையே சொல்லுங்கள் என்றேன்.

அவர் சொன்னார் ”அவர்கள் தாயை வேறு எவரிடமும் அனுப்பமாட்டார்கள். தங்களுடனே வைத்துக்கொள்வார்கள். அத்னால் அவர்கள் தாய்க்கு பணம் அனுப்பவேண்டியதில்லை, அடுத்த்து அவர்கள் ஊரில் செல்வாக்குடன் இருப்பார்கள். ஊரில் அவர்கள்மேல் எல்லோருக்கும் பயம் கலந்த மரியாதை இருக்கும். அத்னால் அவர்களின் நிலத்தில் யாரும் கைவைக்கமாட்டார்கள். அதனால் அவர்களின் நிலத்திற்கு வேலி போடும் பழ்க்கம் கிடையாது. அவர்கள் யாருக்கும் தாங்கள் கொடுக்கும் பணத்த்ற்கு ஈடான பொருளை பெற்ற்க்கொள்ளாமல் பணம் தரமாட்டார்கள். அத்னால் அவர்கள் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை கேட்கமாட்டார்கள்.” என்று கூறினார்.
எனக்கு செருப்பால் அடிபட்டது போன்று இருந்த்து. அடுத்தவாரமே எனது அம்மாவை அழைத்துவந்து என்னுடன் வைத்துக்கொண்டேன்.
4 ந்தமரத்தை அழகாக கூம்பு வடிவத்தில் வெட்டி எடுத்து பின்னர், எங்கள் ஊர் கொள்ளரிடம் (இரும்பு வேலை செய்பவர்) கொடுத்து அவரிடம் கெஞ்சி, வேறு வேலை இல்லாதபோது மவமிறங்கி அதனை பம்பரமாக ஆக்கித்தருவார். அதுவரை அவர் அருகிலேயே அமர்ந்து சாப்பிடக்கூட வீட்டிற்குக்கூட செல்லாமல் காத்திருப்போம்.முத்லில் ஒரு ஆணியை எடுத்து அந்த பம்பரத்தின் கூர்மையான பகுதியில் அடித்து உள்ளே இறக்கிவிடுவார். பின்னர் மெதுவாகாதை அழ்கு படுத்துவார். அன்று இரவு ச்ங்களுக்கு தூக்கம் கிடையாது. தெருவிளக்கில் சலிக்க சலிக்க விளையாடுவோம். பெரியவர்கள் வந்து அடித்து அழைத்து செல்வார்கள். மறு நாள் அத்ற்கு வண்ணம் பூசும் வேலை நடைபெறும்.
எங்கள் ஊர் குளத்தில் தாமரை அடர்த்தியாக படர்ந்திருக்கும்.அத்ற்கு சுவராலான கரைகள் உண்டு. சுவற்றில் நீர்மட்ட்த்தில் உள்ள ஓட்டைகளில் தண்ணீர் பாம்புகள் நிறைய இருக்கும். அவற்றை பிடிப்பது ஒருகலை. முத்லில் த்வளை வேண்டும். அதை பிடிக்க வயல்வெளிகளில் அலைந்து பிடித்து வருவோம். த்வளையை ஒரு நீளமான கயிற்றில் கட்டி அந்த சுவற்றின்மேல் நடந்துசென்று மெதுவாக கயிற்றை பாம்பு இருக்கும் துளைக்கு நேராக த்வளை பாம்பின் கண்களுக்கு தெரிவதுமாதிரி காட்டுவோம். பாம்பு மெதுவாக த்வளையைப்பிடிக்க வெளியே வரும். உடனே த்வளையை பாம்பின் வாய்க்கு கொடுத்துவிடக்கூடாது. சிறிதுசிறிதாக வெளியே வரவைக்க வேண்டும். பாம்பு முழுவதுமாக வெளியே வந்த்பின்னர் த்வளையை விழுங்கவிடவேண்டும். ந்ன்றாக விழுங்கிய பின்பு மேலே தூக்கினால் பாம்பு இரையை வெளியே துப்பமுடியாமல் கயிற்றுடன் வரும். அருகில் உள்ள நெடுஞ்சாலையில் கொண்டு விட்டால் அத் பயந்து ஓடும். ஆனால் அதனால் தார்சாலையில் வேகமாக ஓட முடியாது. அத்ற்குள் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அதை சட்னி ஆக்கிவிடும். இவ்வாறு ஒருநாளைக்கு 50ல் இருந்து 100 பாம்புவரை கொலைசெய்வோம்


அடுத்து ஓணான் பந்தயம். முத்லில் மாட்டின் வாலில் இருந்து முடியை பிடுங்கவேண்டும். அது ஒன்றும் சாதரண் வேலை இல்லை. எக்குத்ப்பாக மாட்டின் வால் அருகில் சென்று அத்ன்வால்முடியை பிடுங்கினீர்கள் என்றால் அப்புறம் குறைந்த்து நான்கு பல்லாவது காணாமல் போய்விடும். அதற்கு மாட்டின் பின்புறமாக பக்கவாட்டில் நின்றுகொண்டு மாடு தனது வாலை எப்போது அசைக்காமல் நிறுத்துகிறதோ, அப்போது மெதுவாக மாட்டின் வாலில் உள்ள முடிகளில் இரண்டு அல்லது மூன்று முடிகளை மட்டும் சட்டென்று பிடுங்கவேண்டும். பிறகு அவைகளை இரண்டு இரண்டாக அரளி கம்பின் முனையில் இறுக்கமாக்க் கட்டவேண்டும். அந்தமுடியின் மறுமுனையில் சுருக்கு முடிச்சு போடவேண்டும். இனிதான் ஓணான் பிடிக்கவேண்டும்.. இந்த ஓணானுக்கு ஒரு புத்தி உண்டு.அது எப்போதும் தனது த்லையை தூக்கியபடியே செடிகளின் கிளைகளில் இருக்கும். அது ந்மக்கு மிகவும் வசதியான விசயம். அவ்வாறு நிற்கும் ஓணானின் த்லைவழியாக கழுத்தில் இந்த சுருக்கை மாட்டவேண்டும். பிறகு சரக்கென்று இழுக்கவேண்டும். இப்போது ஓணான் நம்கையில். இவ்வாறு ஆளுக்கு ஒரு ஓணான் என்று பிடித்துகொள்வோம்.இத்ற்கு முன்பாக வாய்க்காலில் களிமண் எடுத்து வண்டி செய்யவேண்சடும். வண்டி செய்து ந்ல்லமுறையில் அதனை காயவைத்து, ஒற்றைமாட்டுவண்டி இரட்டைமாட்டுவண்டி என்று த்யாரித்து வைத்திருப்போம். இதற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களாவது ஆகும். பந்தயத்தன்று காலை 10மணி அளவில் எல்லோரும் நெடுஞ்சாலையில் கூடுவோம். வண்டிகளில் ஓணான்களை மாடுபோல் கட்டி, மேலும் அவற்றிற்கு கோபமூட்ட மூக்குப்பொடியை அவற்றின் கண்களின்மீது தூவுவோம்.அத்ன்பிற்கு அந்த வண்டிகள் பற்க்கும்போது சக்கரங்க்கள் பிய்த்துக்கொண்டு ஓடுவது கண்கொள்ளாக்காட்சி.

Thursday, July 8, 2010

3
ள்ளி விடுமுறை நாட்கள், எங்களின் கொண்டாட்ட்திற்கு
அளவிடமுடியாத மகிழ்ச்சியை அள்ளி வழங்கியது. வயல்வெளிகல் எல்லாம் காய ஆரம்பித்துவிடும். ஆற்றில் நீர் வரத்து குறைந்துவிடும். கிண்றுகளில் மட்டுமே குளித்து கும்மாளமிடமுடியும். ஆனால்விடுமுறை என்பதால், அள்ளி பிள்ளைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்துசிடுவோம்.இருக்கிற அனத்து விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்வோம். மரக்குரங்கு என்று ஒரு விளையாட்டு. எல்லோரும் ம்ரத்தின் மீது ஏறிக்கொள்ள, ஒருவன் மட்டும் கீழே வட்ட்த்தின் உள்ளே உள்ள குச்சியை மேலெ உள்ள யாரும் எடுத்துவிடாமல் பார்த்துக்கொண்டு, மேலே உள்ள ஒருவரில் யாரையாவது தொடவேண்டும். அப்படி தொட்டுவிட்டால், அவர் கீழே சென்று மற்றவர்களை தொட வேண்டும். ஆனால் மேலே உள்ளவர்கள் கிழே இறங்கி வட்ட்த்தினுள்ளே உள்ள குச்சியை எடுத்து தூரமாக எறிந்துவிடுவார்கள். அப்படி குச்சி வட்ட்த்தினுள் இல்லாதபோது அவர் யாரை தொட்டாலும் செல்லாது. மீண்டும் அவர் ஓடிசென்று அந்த குச்சியை எடுத்து வந்து, வட்ட்த்தினுள் வைத்துவிட்டு, பின்னர்தான் அவர் மரத்தின் மீதுள்ளவர்களை தொடவேண்டும். மேலும் கபடி, கிட்டிபுள் ஆகிய விளையாட்டுகள். கோலி, தீப்பெட்டி படம் வைத்து விளையாடும் விளையாட்டு. ஊரில் முத்தாலம்மன் கோவில் வெளிப்புறத்தில், கல்லில் ப்தினெட்டாம்புலி விளையாடுவோம். அதை எங்களுக்கு கற்றுக்கொடுத்தவர், ஊரில் எல்லோரும் அவரை கரடி என்றுதான் அழைப்பார்கள். அப்போது அவர் வயது 70க்கு மேல் இருக்கும். என்னைப்போன்ற சிறு பிள்ளைகளை அழைத்து அந்த விளையாட்டை கற்றுக்கொடுப்பார். பின்னர் எங்களுடனே விளையாடுவார். அதி 18 ஆடுகளும், 1 புலியும் இருக்கும். அது ஒரு ந்ல்ல விளையாட்டு. பம்பரம்: இதுவும் நாங்கள் விரும்பி விளையாடும் .அப்போதெல்லாம் கடையில் பம்பரம் கிடைக்காது. நாங்களே தயாரிப்போம். அதற்கு ஒருநாள் ஆகும். முத்ல்நாளே எல்லோரும்முடிவுசெய்துவிடுவோம். மறுநாள் காலையில் வெட்டுக்கதி எடுத்துக்கொண்டு ந்ல்ல “மஞ்சந்த்தி” மரம் தேடிச்செல்வோம் அதையும் ஏற்கனவே பர்த்துவைத்திருப்போம். அத்ல் பம்பரம் செய்ய பொருத்தமான கிளையை வெட்டி எடுத்து வருவோம்.

Tuesday, July 6, 2010

கிராம்ம் எப்படி இருக்கும் எதுவும் என்க்குத்தெரியாது. அம்மா கடையை விற்றுவிட்டு மற்ற் பொருட்களை பண்மாக மாற்றிக்கொண்டு சில மாத்ங்கள் கழித்து அண்ணன் ம்ற்றும் அப்பாவுடன் வந்துசேர்ந்தாகள். அங்கு இருந்த ஆரம்ப்பள்ளியில் என்னை சேர்த்துவிட்டார்கள். அண்ண்னை வாடிப்பட்டியில் உள்ள உயர்நிலைபள்ளியில் சேர்ந்தார். நானும் அண்ணனும் ஓரள்விற்கு படிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக கிராமத்துடன் ஒன்ற ஆரம்பித்தோம். வடுகபட்டி, அது கிராம்மல்ல சொர்கம். அங்கு பச்சைபசேல் என்ற் வயல்கள். முல்லை பெரியார் வாய்க்கால். அத்ன்பின் மலைகள் என அனைத்து அழகுகளுடன் அமைந்த கிராமம். பள்ளி சென்ற நேரம் த்விர மற்ற நேரங்களில் விளையாட்டில் கழித்தோம். முத்லில் நீச்ச்சல். தற்போது உள்ளதுபோல் நீச்சல் கற்றுக்கொள்ள பள்ளிகள் கிடையாது. ஏற்கனவெ நீச்சல் தெரிந்த பையன்களோடு நானும் சென்றேன். அவர்கள் ஒரு கிணற்றுக்கு சென்றார்கள். அது ஆழமாகவும் மிகப் பெரியதாகவும் இருந்தது.அவர்கள் அனைவரும் தங்களின் உடைகளை, அதாவது கால்சட்டை மற்றும் மேல்சட்டை அவ்வளவுதான்,களைந்துவிட்டு அம்மணமாக மேலிருந்து குதித்து கிண்ற்றில் நீந்தினார்கள். நான் நீச்சல் தெரியாத காரணத்தால் கிண்ற்றின் கரையில் அமர்ந்துகொண்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அன்று நீச்சல் கற்று கொடுத்து விடவேண்டும் என்று முடிவுசெய்திருந்த செய்தி எனக்குத்தெரியாது. ஒருவன் வந்து என்னை கிணற்றின் அருகில் வருமாறு அழைத்தான். அவர்களின் த்ந்திரம் தெரியாமல் நானும் அங்கு சென்றேன். அவன் என்னிடம் ‘கிணற்றின் உள்ளேபார்.தரை தெரிகிறதா?’ என்றான். நானும் அவன் சொன்னதை ந்ம்பி, மெதுவாக எட்டிப்பார்த்தேன். அடுத்த நிமிடம் நான் கிணற்றின் உள்ளெ இருந்தேன். அவன் என்னை கிணற்றின் உள்ளெ த்ள்ளிவிட்டுவிட்டான். நான் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தேன். உள்ளெ இருந்த மற்றவர்கள் என்னை தூக்கி எவ்வாறு நீச்சல் அடிப்பது என்று கற்றுக்கொடுத்தார்கள். பின்னர், அவ்வாறுதான் அவர்கள் நீச்சல் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். பின்னர் நானும் பல நண்பர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன்.

Monday, July 5, 2010

வலியது வெல்லும் 1 ல்லோரும் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவார்கள். ஆனால் நாங்கள் நகரத்திலிருந்து கிராமத்திற்கு குடிபெயர்ந்தோம். இது ந்டந்த்து 1940களில், சுத்ந்திரத்திற்கு முன்பு. அப்போது மவுண்ரோடில் (தற்போதய அண்ணா சாலை) பழைய விலிங்டன் திரை அரங்கம் அருகே எம்.எஸ்.ஸ்டோர்என்று ஒரு கடை இருந்த்து. கடை என்றால் நீங்கள் நினைப்பது போன்று சாதரண பொட்டிக்கடைஅல்ல.அனைத்தும் ஒரே இட்த்தில் வாங்க்கூடிய கடை. அக்காலத்தில் மது அருந்துபவர்கள் மருத்துவரிடம் “இவர் கட்டாயம் மது அருந்த்வேண்டும்” என்று சான்று பெற்று,அதனை அரசு அலுவலகத்தில் சமர்ப்பித்து, பின்னர்தான் மதுவை கடைகளில் பெறமுடியும். அதுபோன்று மது வாங்குபவர்களுக்கென்று தனியாக மதுக்கடையும் அதிலிருந்தது. அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த்க்கடையின் முழு பொறுப்பும் பார்த்துக்கொண்டது எங்களின் தகப்பனார். பிறகு ஏதொ காரணத்திற்காக அங்கிருந்து அவர் விலகி, த்ற்போது எல்டாம்ஸ் சாலையில் உட்புறம் திருவள்ளுவர் சாலை என்று ஒரு தெரு இபோதும் உள்ளது. அந்த்தெருவில் ஒரு ரொட்டிக்கடை(பேக்கரி)ஆரம்பித்தார். அது ந்ன்றாகவெ ந்டந்தது. ஆனால் விதி வெறுவிதமாக இருந்த்து. எங்கள் த்ந்தைக்கு டி.பி என்கிற நோய் தாக்கியது, எங்களின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. எங்களின் தாயார்; கடையையும்,எங்களையும்,தந்தைய்யும் கவனித்துக்கொள்வது என்பது முடியாத சூழ்நிலையில், வேறு வழியில்லாமல் குடும்பத்தை அம்மவின் ஊரில் பாட்டியிடம் அனுப்பிவிடுவது ந்ன்று முடிவு செய்து, முதலில் என்னையும் அக்காவையும் முத்லில் அனுப்பினார்கள்.அது (வடுகபட்டி மதுரையில் இருந்து 15வது மைலில் உள்ளது) வைகை அணை அருகே ஒரு வடுகபட்டி உள்ளது. அது வேறு. அதனால் எங்களின் ஊர் T. வடுகபட்டி என்று அழைக்கப்படுகிறது. அங்கே எங்களின் பாட்டி சற்று வசதியாக நிலபுலங்கலோடு இருந்தார். என்னையும் அக்காவையும் முதலில் அனுப்பியதற்கு வேறு ஒரு காரண்மும் இருந்த்து. அக்காலத்தில் நாங்கள் குடி இருந்த பகுதிகளில் யானைக்கால் நோய் அதிகமாக இருந்த்து. வயதுவந்த பெண்ணுக்கு அந்நோய் வந்துவிட்டால் பின்னர் யார் திருமணம் செய்து கொள்வார்கள். எனவேதான் எங்கள் இருவரையும் முதலில் அனுப்பினார்கள்
அப்போது எனக்கு வயது ஜந்து.

Wednesday, June 30, 2010

மரணம்

மனித வாழ்வில் பலவிதமான நிகழ்வுகள் நடந்தாலும், முடிவில் எல்லோருக்கும் நடப்பது ஒன்றுதான்! அதுதான் மரணம்.
ஒருவர் சொன்னார் “நம் உடலில் இருந்து எது வெளியே சென்றாலும்
சுகமாக இருக்கிறது, சிறு நீர், மலம், ஏப்பம், இன்னும் சில,
அப்போதெல்லாம் நமக்கு, மிவும் சுகமாக இருக்கிற்து.
உயிர் போனால் எவ்வளவு சுகமாக இருக்கும்?
(என்ன உதைக்க வேண்டும்போல் கோபம் வருகிறதா?)
அப்படிப்பட்ட மரணத்தை மனிதர்கள் ஏன் தாங்களாகவே
தேடிக்கொள்கிறார்கள்? எந்த மிருகமாவது தானாக மரணத்தை
தேடிக்கொண்டதாக செய்தி உண்டா?
ஆனால் மனிதன் மட்டுமே மரணத்தை தானாகத்தேடிக்கொள்ளும்
பிராணியாக உள்ளான்.
காரணம் அவனது ஆறாம் அறிவு. மானம், கௌரவம், மற்றும் இதுபோன்ற
பகுத்தறிவு சம்பந்தப்பட்ட விசயங்கள்தான், மனிதனின் தற்கொலையை
முடிவு செய்கின்றன. தற்கொலைகளில்தான் எத்தனைவகை!
அவைகளை விளக்கினால் தனி அத்தியாயமே போடவேண்டும்.
தற்கொலைகளை தவிற்ப்பதற்கு மனதை சுத்தமாகவும், எதிலும்
தெளிவாக சிந்திக்கும் திறனும் கொண்டு நல்லமுறையில்
யோசித்து செயல்பட்டால் தற்கொலைகள் மனிதவாழ்வில்
இல்லாமல் போய்விடும்.

Tuesday, June 29, 2010

அழகான அனுபவம்.


○ மனமகிழ்வுடன், முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும்
வேலை ஒரு அழகான அனுபவமாகும்
.


பாடம்
○ பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிறோம்!
ஆனால் வாழ்க்கையில்,
தேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்
!

கடவுள்
○ வழிபாடு செய்யுங்கள்..
கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்.
ஆனால் சேவை செய்யுங்கள்..
கடவுள் உங்கள் அருகில் வருவார்!
-அன்னை தெரசா
.

○ கடவுளுக்கும் மரணம் வரும்.
ஒருவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் போது!
தந்தை பெரியார்.




வேலைக்காக
○ ஊர்சுற்றும் பிள்ளையின் வேலைக்காகக்
கோயில் சுற்றும் அம்மா.


குழந்தை
○ குழந்தைகள் உங்களுடன் இருக்கலாம்
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்
உங்கள் சிந்னையைத் தரவேண்டாம்!
அவர்களுக்கென்று சிந்தனை இருக்கிறது!
கலீல் ஜிப்ரான்.

Wednesday, June 23, 2010








நாங்கள் சென்ற மாதம் வட இந்திய ச்ற்று பயணம் சென்றோம்
அவைகளில் சில படங்கள் உங்களுக்காக.

Saturday, February 6, 2010

Saturday, February 6, 2010
இன்று (31.01.2010) எனது பணியிலிருந்து
ஓய்வு பெறுகிறேன். மிக ந்ல்ல பணி.
ஆனால் மன உளைச்சல்கள் அதிகம்.
உண்மையில் சொல்வதென்றால்,
ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான
மனிதர்களை சந்திக்கவேண்டி இருந்தது.
அவர்கள் அனைவரும் வாழ்க்கையின்
அனைத்து நிலைகளிலும் இருந்து வருபவர்கள்.
எல்லோரையும் சமாளிக்கவேண்டும்.
அதே நேரம், நிர்வாகத்தின் பெயரையும்
காப்பாற்றவேண்டும்.
ஆனால் அது, கம்பிமேல் ந்டக்கும்
கழைக்கூத்தாடியின் நிலைதான்.
இந்த நிலையில் நிர்வாகத்தின்
அலுவலர்களுக்கும் சரியான முறையில்
மரியாதையும், பணியில் தவறாமையும்
பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதனையும் மீறி ஏதாவது ந்டந்தால்
உடன் பணி நீக்கம்தான்!
நமக்காகவும், நமது குடும்பத்தாருக்காகவும்
அத்தனை அவமானங்களையும்
பொறுத்துக்கொண்டு, தலைவிதியை
நொந்துகொண்டு அனைத்தையும்
பொறுத்துக்கொள்ளவேண்டும்.
மேலும், ந்மக்கு மேல் நிலையில் உள்ள
அலுவலர்களை மிவும் மரியாதையுடன்
எதிர்கொள்ளவேண்டும். இல்லையென்றால்
அனைத்து விதாமான கொடுமைககளும்
நமக்கு எதிராக அறங்கேற்றப்படும்.
மேலும் சங்க நிர்வாகிகளையும்
தவறாமல் மிக மரியாதையுடன்
கையாளவேண்டும். இல்லையென்றால்
நாம் நிம்மதியாக பணிபுரியமுடியாது!
இதனிடையில் காவல்துறை, மற்றும் உள்ள
அனைத்து அரசு அலுவலர்கள்,அதிகாரிகள்
ஆகியோரையும் திருப்திபடுத்தவேண்டும்.
மேலும் வழியில் மாணவர்கள் மற்றும்
அனைத்து விதமான மனிதர்களையும்
சமாளிக்கவேண்டும். அப்படி என்னதான் பணி
என்று கேட்கிறீர்களா?
அதுதான் அய்யா மாநகர போக்குவரத்து
நடத்துனர்பணி அய்யா!.
Posted by mathileo at 2:54 AM 0 comments

Thursday, January 7, 2010