செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Friday, August 27, 2010

6
ன்னுடய படிப்பு என்பது எஸ்.எஸ்.எல்.சி யுடன் முடிவுக்கு வந்தது. தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே, ஒரு நாள் இரவு
சாப்பிடும்போது, அம்மா சொன்னார்கள்,”எப்படியோ படிக்கவைத்துவிட்டோம். இதற்குமேல் குடும்ப நிலைமை, உங்களை (என்னையும் ,அண்ணனையும்) படிக்கவைப்பதற்கு ஏற்றதாக இல்லை. அவனும்(அண்ணன்) படித்துவிட்டு ஊர் சுற்றுகிறான். நீயும் அவ்வாறு கெட்டுப்போகக்கூடாது. எனவே
நாளை நீயும் நயினாவும்(அப்பா) சென்னை செல்கிறீர்கள்”.என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.” நானும் அண்ணனும், நீங்கள்சென்று வீடு போன்றவற்றை ஏற்பாடு செய்தபிற்கு வருகிறோம்.. நீ ந்யினா சொல்வதுபோல் கேட்டு நடக்கவேண்டும்.. ”என்று அறிவுரை கூறினார்கள். இந்த இடத்தில் ஒன்றைக் சொல்ல வேண்டும். எங்கள் அக்காவீட்டில் அண்ணனை கல்லூரியில் படிக்கவைப்பதற்கு, (அம்மா பணம் கொடுக்கிறோம் என்று சொல்லியும்கூட) மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் காலை நானும் அப்பாவும் நகை ஒன்றை எடுத்துக்கொண்டு, அதை அடமானம் வைத்து பணம் பெறுவதற்காக சைக்கிளில் சோழவந்தானுக்கு சென்றோம்..எங்கள் ஊரிலிருந்து சோழவந்தான் 5 மைல் இருக்கும். நீரேத்தான் என்ற இடம்வரை நெடுஞசாலை, பின்னர் சாலை மிகவும் குறுகலாக இருக்கும்(இன்றும் அப்படித்தான் உள்ளது.) அப்பாதான் சைக்கிளை ஓட்டினார். நீரேத்தானிலிருந்து சோழவந்தான்வரை சாலை தலைகீழாக இருக்கும்.. நாம் பெடலை மிதிக்க வேண்டியதில்லை, பிரேக்கைத்தான் பிடிக்கவேண்டும். அவ்வாறு செல்லும்போது, எங்களுக்கு முன்னால் ஒரு காலியான மாட்டுவண்டி சென்றுகொண்டிருந்தது. எதிரே மதுரை செல்லும் சுதந்திரம் டிரான்ஸ்போர்ட்பேருந்து வந்தது. அப்பாவால் சமாளிக்கமுடியாமல், மாட்டுவண்டிக்கு இடதுபுறமாக சைக்கிளை ஒதுக்கினார். தடுமாறியதில் இருவரும் சைக்கிளோடு வாய்க்காலில் விழுந்தோம். நான் வாய்க்கால் பள்ளத்தில் இருந்து தலையை தூக்கி பார்த்தபோது, மாட்டின் பின் காலுக்கும், வண்டியின் சக்கரத்திற்கும் நடுவில் அப்பா விழுந்தார். வண்டியின் சக்கரம் அப்பாவின்மேல் ஏறி இறங்கியது. அந்த வண்டி பாரம் ஏற்றபடாத்தாலும், அப்பாவின் இடுப்பு எலும்புகளின்மேல் ஏறி இறங்கியதாலும் அவருக்கு அதிகமான பாதிப்பு ஏற்படவில்லை.
சிறுவயது என்பதால் என்னால் அழுவதைத்தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த மாட்டுவண்டியிலேயே மயக்கமுற்ற அவரை படுக்கவைத்து, அழுதுகொண்டே சைக்கிளை த்ள்ளிக்கொண்டு பின்னால் சென்றேன். சோழவந்தானில், அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். அதற்குள் எங்கள் வீட்டிலிருந்து, அண்ணன் வந்துவிட்டார். அண்ணனும், அப்பாவும் பேருந்தில் ஊருக்கு சென்றார்கள். நான் சைக்கிளில் சென்றேன். அப்பாவால் ஒரு மாதம் வரையில் எழுந்து நடக்க முடியவில்லை. அப்போது எங்களின் உறவினர் ஒருவர் ராணுவத்தில் இருந்து வந்திருந்தார்.
அவர் அப்பாவிற்கு, வலி தெரியாமல் இருக்க மது குப்பி ஒன்றை கொடுத்துவிட்டுப் போனார். அப்போதுதான் மது என்கிற பொருளைப்பற்றி தெரிந்துகொண்டேன். அதுவும் எதோ ஒரு மருந்து என்ற அளவில்தான். ஆனால் அதன்பிறகு, இறக்கும் வரை அவருக்கு அந்தவிபத்தினாலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. எனவே நாங்கள் சென்னை செல்வது தாமதமாகியது.

ஒருமுறை எனது அம்மா, உறவினர் ஒருவரிடம் சென்று ஐம்பது ரூபாய்(1960களில் 50 ரூபாய் என்பது பெரிய தொகை) கடனாக கேட்டுள்ளார். அத்ற்கு அவர் “நாளை வா தருகிறேன்” என்று கூறி உள்ளார். சரியென்று அம்மாவும் அவருடைய வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.அப்போது அவர் தனது மனைவியிடம் ”இவர்களுக்கெல்லாம் கேட்டவுடன் கொடுத்தால் பணத்தின் அருமை தெரியாது. இரண்டு தடவை அலையவிட்டு கொடுத்தால்தான் தெரியும் என்று கூறியுள்ளார். இது அம்மாவின் காதில் விழுந்துள்ளதும் அன்றிலிருந்து அவர்கள் யாரிடமும் கடன் கேட்பது இல்லை. அதேபோல் நாங்கள், எங்களின் பாட்டி (அம்மாவுடைய அம்மா) வீட்டில் தான் இருந்தோம். மாமாவுக்கு இவர்கள் எங்கே இந்தவீட்டிலேயே த்ங்கிவிடப்போகிறார்கள் என்று
சந்தேகம்.. பல சமயங்களில். அந்தவீட்டில் ஒரு அறையில், கதவை பூட்டிவிட்டு, சுவற்றின் மேல்புறத்தில் ஒரு துளையின் வழியாக,தொட்டியில் நீரை ஊற்றுவதுபோல் நெல்லைக் கொட்டிவிடுவார்கள். அதேவீட்டில் நாங்கள் உணவின்றி பசியோடு
இருப்போம். அவர்தான் எங்களின் தாய்மாமன். பின்னர் ஒருநாள் எங்களை அந்த வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார். அனால் அவர் பாட்டிக்கு ஏதும் கொடுப்பது இல்லை. அவர் எங்கள் வீட்டில்தா சாப்பிட்டார். பாட்டிக்கு அவ்வளவு சொத்துகள் இருந்தும் அவரால் மகனை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை.சொந்த ஊரிலேயே நாங்கள் வாடகைவீட்டில் குடியிருந்தோம். வாடகை மாதம் ஐந்து ரூபாய். பாட்டி இறந்தபோது அம்மா பாட்டிக்கு செய்யவேண்டிய ஆரம்ப சடங்குகளை செய்துகொண்டு இருக்கும்போது, மாமா வந்து நீங்கள் போகலாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி, வான வேடிக்கைகளுடன் பாட்டியின் இறுதி சடங்கை செய்தார். உயிருடன் இருக்கும்போது பாட்டிக்கு சோறுபோடாதவர், இறந்தவுடன் த்ற்பெருமைக்காக அவ்வாறு செய்தார். இவ்வாறான சூழ்நிலையில்தான் அம்மா எங்களை சென்னைக்கு அனுப்ப முடிவுசெய்தார்.

No comments:

Post a Comment