செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Tuesday, December 22, 2009

Friday, December 18, 2009

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்







''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''




சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.




''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.




''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.




காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.




நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.




நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.




''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

Thursday, November 19, 2009

ஆண்மகன்

உலகில் குடும்பம் என்பது பெரும்பாலும்
ஆணின் உழைப்பு,பெண்ணின் அரவணைப்பு
இரண்டும் சேர்ந்ததுதான் என்பது உலக மரபு!
ஆனால் உண்மையில் நடப்பது வேறு மாதிரி!.
சாதாரண கீழ் ந்டுத்தர வருவாய் பிரிவில்
உள்ளவர்கள் வாழ்க்கை மிகவும் சிக்கலானது.
கணவன் ஏதோ சம்பாதித்துக்கொண்டுவந்து
கொடுப்பான். அதை மனைவி வைத்துக்கொண்டு
சமாளிப்பாள். இதுதான் ந்டைமுறை.
ஒரு நாள் அந்த் வீட்டில் குழ்ந்தைக்கு பால்
டப்பா தீர்ந்துவிட்டது. மனைவி கணவனிடம்
”மாலை வரும்போது பால் டப்பா வாங்கி
வாருங்கள்” என்று சொல்வாள். அத்தோடு
அவள் கவலை முடிந்துவிடும். ஆனால்
அந்த கணவன், அன்றைய தனது பணியை
முடித்து விட்டு பின்னர் குழந்தைக்கு பால்
டப்பா வாங்கியாக வேண்டும். ஆனால் அவனிடம்
பணம் இல்லை. பின்னர் யார்யாரிடமோ கேட்டு
ஒரு வழியாக பணம் புரட்டி, அதன் பின்னர்
கடைக்கு சென்று (அப்போதெல்லாம் பால் டப்பாக்கள்
கிடைப்பது மிகவும் அரிது) கடைக்காரரிடம்
கெஞ்சி அதனைப் பெற்று, அவன் வீடு
வரும்போது, ஏதோ உலகையே வென்றதுபோல்
தோன்றும்.
உண்மையில் இதுதான் சராசரி இந்தியனின்
பொருளாதார மற்றும் சமூக சூழ்ல்!

Wednesday, November 18, 2009

கல்விக்கடன்
நான் ஒரு குறைந்த வருமானமுள்ள
ஒரு அரசு ஊழியன். எனது மகன் +2
தேர்வில் நல்ல மதிப்பெண்
பெற்றதால் பொறியியல் கல்லூரியில்
சேர்க்கலாம் என்று முற்சித்து, ஒருவாறாக
அந்த வேலை முடித்து,எப்படியோ ப்ணம்
கட்டியாகிவிட்டது. சரி வங்கியில் கல்விக்கடன்
பெற்லாம் என்று ஒரு வங்கிக்கு நானும் எனது மகனும்
மகனும் சென்றோம். அந்த வங்கி மேளாலர்
ஏதோ தாந்தான் அந்த வங்கிக்கு முதலாளிபோல்
அதெல்லாம் தரமுடியாது என்று ஒரேமூச்சில்
முடித்துவிட்டார். நாங்கள் இருவரும் அவர் காலில்
விழாதகுறையாக வேண்டிப்பார்த்துவிட்டோம்.
அவர் மசிவதாக இல்லை.
வேறு வழியின்றி , தலைகுனிந்து
வெளியேறினோம்.
பின்னர் வெறு ஒரு வங்கியில் சென்று( அதுவும்
ஒரு நண்பரின் சிபாரிசின் பேரில்) வேண்டினோம்.
அவர்கள் பரவாயில்லை. மொத்தக்கடனே ரூ.
96,000/- தான்.(ஆண்டிற்கு 24,000/-) . அதற்கு
ஒவ்வொரு ஆண்டும் ரூ.5000/- க்கு சேமிப்பு
ரூ.1,00,000/- க்கு ஆயுள் காப்பீடு, மேலும்
முதலாண்டு ரூ.24,000/-க்கு வட்டி, எல்லாம்
சேர்த்து கணக்கிட்டால் எங்கோ செல்லும்.
எனவே முத்லாண்டு மட்டும் கடன் பெற்று,
அடுத்த ஆண்டு முத்ல் கடன் பெறாமல்
விட்டுவிட்டேன்.
முதல் ஆண்டு ரூ.24,000/-க்கு செலவு ரூ.11,000/-.
இரண்டாம் ஆண்டு ரூ.14,000/-, மூன்றாம் ஆண்டு
ரூ.17,000/-, நான்காம் ஆண்டு ரூ.21,000/-.
இது கடனா, கந்து வட்டியா?
இதுதான் நம் நாட்டு பொதுத்துறை வங்கிகள்
.மக்களுக்கு சேவை செய்யும் நிலை.
ஒரு அரசு ஊழியனான எனக்கே இந்த கதி
என்றால்,மற்றவர்களின் நிலை, பாவம்
நம் இந்திய குடிமக்கள்.

Thursday, November 12, 2009

மதுவும் தமிழ்நாடும்

நான்1952 ல் பிறந்தவன். அப்போதெல்லாம்
மது என்றால் யாருக்கும் என்னவென்றே
தெரியாது. பெண்கள் குழ்ந்தை பெற்றால்,
ரகசியமாக பிஸ்கட் பிராந்தி என்று
வாங்கி வந்து, மிக மறைவாக வைத்து
அவர்களுக்கு கொடுப்பார்கள். மேலும்
ஆயுர்வேத கம்பெனிகள் தயாரிக்கும்
ஏதோ ஒரு மருந்தில் அதிக ஆல்கஹால்
உள்ள ஒன்றை, கடைக்கார்ர்கள்
விற்பார்கள்.ஆண்கள் அதை வாங்கிப் பருகி
தங்களின் மது ஆசையை தீர்த்துக்
கொள்வார்கள்.மேலும் கிராமத்தில்
யார்ரவது ராணுவத்தில் இருந்தால்,
அவர்கள் ஊருக்கு வரும்போது
கொண்டு வரும் மது குப்பிக்ச்ளுக்காக
ஒரு கூட்டம் காத்திருக்கும்.
பாண்டி, மற்றும் காரைக்காலை சுற்றி உள்ள
மாவட்டங்களை சேர்ந்தவர்கள்
அங்கு சென்று தங்களின் “தாகசாந்தியை”
தீர்த்துக்கொள்வார்கள். முதன் முதலாக
1973 ல் கருணாநிதி ஆட்சி காலதில் தான்
தமிநாட்டில் மது மக்களுக்கு
அறிமுகம் செய்யப்பட்ட்து. இன்று
எல்லா வயதினரையும் ஆட்டிப்
படைக்கும் அளவிற்கு மது சமூகத்தில்
கலந்து விட்ட்து. பின்னர் வந்த
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியவர்களுக்கும் அதை
தடுக்கும் அள்விற்கு எண்ணம் ஏற்படவில்லை.
இன்று ஒரு சமுதாயத்தையே “குடிகார”
சமுதாயமாக மற்றிய பெருமை கருணாநிதி
அவர்களையே சேரும்!
இது தான் இன்று, கள் இறக்க அனுமதி கோரி
போராட்டம் நடத்தும் அள்விற்கு வந்துவிட்ட்து
!

Wednesday, November 4, 2009


புரியவில்லை
அடிக்கடிசலித்துக்கொள்கறாய்
’உங்களை கட்டிகொண்டு
என்ன சுகம் கண்டேன்.’


எதை வாங்கிக்கொடுத்தாலும்
குறை காண்கிறாய்
எதெற்கெடுத்தாலும்
சினம் கொள்கிறாய்


உணவு உடை உறைவிடம்
உறுதிசெய்யப்பட்டிருந்தாலும்
அடுத்தவர் வாழ்வே
உயர்வாகத்தெரிகிறது - உனக்கு


பல ஆண்டுகள்
பொறுமையாயிருந்தும்
விட்டுக்கொடுத்தும்
அனுசரித்துபோயும்
புகைப்படங்களில் மட்டுமே
மகிழ்ச்சியாய் இருக்கிறோம்
நீயும் நானும்-புன்னகையோடு


இறுதிவரை
உன் அன்பை என்னால்
புரிந்துகொள்ளமுடியவில்லை
இனியும் புரிந்துகொள்ள முடியாது


சுற்றி இருப்பவர்கள் முன்
நீ கதறி ஒப்பாரி வைக்கும்போது
நான் சவமாய்!

Saturday, October 31, 2009

இது கேரளாவில் நடைபெற்ற திருமணம். இதில் என்ன சிறப்பு உள்ளது என்று நீங்களெ தெரிந்துகொள்ளுங்கள்!





இவை மிக வித்யாசமகவும், என்னைக் கவர்ந்ததாலும்! நீங்களும் அனுபவியுங்கள்!





இந்த மாதிரியான் காட்சிகளை நாம் இந்தியாவிலன்றி வேறெங்கும் காண்முடியாது!













Friday, October 30, 2009

நூறாண்டுகளுக்கு முன்பு ந்ம் சென்னை.
எவ்வளவுஅருமையாக உள்ளது என்று பாருங்கள்!










நான் தமிழில் தாயைபற்றி பல கவிதைகள் படித்துள்ளேன். ஆனால் ஆங்கிலத்தில் என்னைக்கவர்ந்த ஒன்று. நீங்களும் அனுபவியுங்கள்


MOTHER
“ A long wish, for happiness on
Your birthday mother.
There is magic in a mother’s touch
And sunshine in her smile.
There is love in everything she does
To make our lives worthwhile
We can find both hope and courage
Just by looking in her eyes.
Her laughter is a source of joy,
Her words are warm and wise.
There is kindness and compassion
To be found in her embrace ,
And we see the light of heaven
Shining from a mother’s face
Missing you a lot mom
From your loving son.”
- By unknown
எம்பெருமான்
உண்ணும் சோறும் பருகும் நீரும் திண்ணும் வெற்றிலையும் - எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணிணுள் அவன் சீர் வளமிக்க அவனூர் வினவ
திண்ணம் என் இள்மான் புகுமூர் திருகோளூரே!



அரசியல் வாதி
நாக்கினால் ஊரையே நாட்டித்திரட்டுவான்
நாக்குக்கும் வெற்றி தந்து
நாடகக்காரன் வேடத்தில் நின்றவன் நடிப்புக்கும்
வெற்றி தந்து
தூக்கினால் மெலெழும் ஓட்டை
துருத்திக்கும்
தூக்கத்தில் வெற்றி தந்து
தூயவர் வாழ்க்கையில் தோல்விமேல் தோல்வியே
தொடுத்து வைக்கின்ற
கலையே! வாக்கிலா
வாக்கிலா செல்வமே! மனமிலாத் தெய்வமே!
வடிவான மஞ்சள் நிலவே!
மலர்கொண்ட கூந்தலை தென்றல்
தாலாட்டும்
மதுரை மீனாட்சி உமையே!


பாராட்டு
நேசனை காணாவிடத்தில்
நெஞ்சார துதித்த்ல்
ஆசானை எவ்விடத்தும் - அப்படியே
வாச மனையாளைப் பஞ்சனையில்
மைந்தர் தம்மை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்!


வாயு மைந்தன்
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக , ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு - அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான்,

அவன் எம்மை அளித்துக்காப்பான்!

வருங்காலத் தூண்கள்

நான் தினமும் பயணம் செய்யும் பேருந்தில்
சென்னையின் நான்கு மகளிர் கல்லூரி மாணவிகளும்
மாநிலக்கல்லூரி மணவர்களும் பயணம் செய்கிறார்கள்
தினசரி மாணவர்கள் தவறாமல், கைபேசி உதவியினால்
அனைவரும் அந்த பேருந்தில்
சேர்ந்து விடுவார்கள்.

பின்னர் அவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு
அள்வே கிடையாது. மிக மட்டரகமாக இட்டுக்கட்டிய
பாடல்களை பாடிக்கொண்டும், தமிழில் எத்த்னை
வசை மொழிகள் உள்ளனவோ அத்தனையையும்
சப்தமாக பேசிக்கொண்டும்.(இவர்கள் வீட்டில்
தாய், சகோதரி, தந்தை முன்பாக இவ்வாறுதான்
பேசுவார்களா?
ர்களா)
அந்த ஒரு மணி நேரப்பயணமும் நமக்கு
கொடுமயான நரகம்தான்.
இத்னை போக்குவரத்து நிர்வாகமும், அரசும், ஏன்
காவல்துறையும் கண்டு கொள்வதே இல்லை
பயணிகளும் வாய்மூடி மௌனிகளாக
தலைகுனிந்து இந்த நரகத்தை
தினசரி பொறுத்துக்கொண்டு,
தங்களின் தலைவிதியை நொந்துகொண்டு
பயணம் செய்கிறார்கள்
இவர்கள்தான் நம் நாட்டின் வருங்காலத்தூண்கள்
பேருந்து எண் 27H
ஆவடி- அண்ணா சதுக்கம்

Thursday, October 29, 2009

காவல் துறை கண்ணியம்

நான் சென்ற மாதம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும்போது, அருகெ நின்ற மாம்பழ வியாபாரம் செய்யும் இளைஞனிடம், ஒரு காவல் துறை வாகனம் வந்து நின்றது.அதன் உள்ளே ஒரு அதிகாரி, அவர் இருக்கையின் பின்புறம் பூத்துண்டு போர்த்தி பந்தாவாக அமர்ந்திருந்தார். பொதுவாக அரசுஅதிகாரிகள் தங்களின் அலுவலக வாகனத்தில் செல்லும்போது, தங்களின் இருக்கயில் பூத்துண்டுகளை போடுவது, ’பாருங்கள் நான் பெரிய அதிகாரி வறுகிறேன் என்று பந்தா காட்டத்தான்.வாகன ஓட்டுனர் ஏதொ சைகை செய்து அதிகாரி பழம் கேட்கிறார் என்றார். அவரும் பெரியதும் அல்லாத சிறியதும் அல்லாத ஒரு பழத்தை எடுத்து நறுக்கி அவரிடம் கொடுத்தார். அப்போது வாகனத்தில் இருந்த அதிகாரி, ஓட்டுனரை அழைத்து பெரிய பழத்தை காட்டி சைகை செய்தார். நான் அந்த அதிகாரியையே முறைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஓட்டுனர் பழவியாபாரியிடம், பெரிய பழத்தை காட்டி, அதை கொடு என்றார்.அவனும் முகச்சுழிப்புடன் அதை எடுத்து வேண்டாவெறுப்பாக நறுக்கிக் கொடுத்தான்.னான் பார்த்துக்கொண்டிருந்தது அந்த அதிகாரிக்கு என்னவோபோல் இருந்ததால் அவர் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டார். வெட்கமில்லாமல் இரண்டு பழஙளையும் வாங்கிக்கொண்டு சென்றனர். இதில் உள்ள விசயம்.அந்த அதிகாரிக்கு குறைந்த பட்சம் 25,000 சம்பள்ம் இருக்கும். அவர் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பார். பத்து ரூபாய் பழத்திற்கு பிட்ச்ஹை எடுக்க வேண்டுமா? அவரால் அந்த பத்து ரூபாய் கொடுத்து வாஙமுடியாதா? வாழ்க ஜனநாயகம்! வாழ்க அரசு அதிகாரிகள்!