செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Wednesday, September 8, 2010

8
ஸ்கார்னர்! சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்று. அக்காலத்தில் நாங்கள் காலை 7 ம்ணிக்கே லாட்டரி வியாபாரத்தை ஆரம்பித்துவிடுவோம். மக்கள் வரிசையில் நின்று வாங்குவார்கள். ஏனென்றால் எல்லோருக்கும் லட்சாதிபதி ஆகவேண்டும் என்கிற அவா!. காலை 10 மணிக்குள் மூவரும் சேர்ந்து ரூ.300 முதல் ரூ.400 வரை வியாபாரம் செய்துவிடுவோம். அண்ணன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, திருவல்லிக்கேணியில் உள்ள மொத்த வியாபாரியிடம் சென்று சீட்டுகளை வாங்கிவருவார். மாலை வியாபாரியிடம் கணக்கை ஒப்படைத்தபின்பு மீதமுள்ள தொகையை நங்கள் மூவரும் பங்கிட்டுக்கொள்வோம். ( இது தவறு என்று அப்போது தெரியவில்லை)ஒரு பங்கை நண்பருக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ள இரண்டு பங்கை அண்ணன் வீட்டிற்கு கொண்டுவருவார். பின்னர் அண்ணன் துறைமுகத்தில் பணிபுரிபவர்களின் உத்வியோடு அங்கு தற்காலிக பணியில் சேர்ந்தார். அங்கு கப்பல்கள் குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தப்பட்டுவிடும். அங்கிருந்து சிறிய படகுகளின் உதவியோடு துறைமுகத்தின் உள்ளே இழுத்து வருவார்கள். அந்த சிறிய படகில்தான் அண்ணனுக்கு வேலை. அதில் உள்ள கனமான கயிறுகளை பயன்படுத்துவதால், பழக்கமில்லாத கைகளில் வரிவரியாக இரத்த காயங்கள். அதைப்பார்த்து அம்மா கோழியிறகால் எண்ணை த்டவிக்கொண்டே கண்ணீர் விடுவார்கள். அதைப்பார்த்து நாங்களும் கண் கலங்குவோம். இந்த நேரத்தில்தான் அப்பாவுக்கு ”முசிறிபுத்தன்” அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பா அவருடைய பேட்டரி பிரிவில் பணிபுரியும் 20 பேர்களை வேலை வாங்கும் மேலாளராக சேர்ந்தார். அங்கு பழைய கார், லாரி பேட்டரிகளை விலைக்கு வாங்கி அதை பிரித்து அதிலுள்ள ஈயத்தை பிரித்தெடுத்து, EXIDE, AMCO போன்ற நிறுவனங்களுக்கு விற்பது மற்றும், மின் கலன்களுக்கான NEGATIVE, POSSITIVE பிளேட்டுகளை தயாரித்து அனுப்புவது ஆகிய வேலைகள் நடந்துவந்தன. ஆனால் அங்கு பணிபுரிந்ததன் காரணமாக, அவர் அங்கிருந்த இரசாயனங்களை சுவாசித்து விரைவில் உடல்நலமிழந்தார். அதற்கு முன்பாகவே முசிறிபுத்தன் அவர்களிடம் அண்ணனைப்பற்றி சொல்லி வைத்துள்ளார். அந்த் நேரத்தில் அவருக்கும், தான் நடத்திக்கொண்டிருந்த “அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற” த்திற்கு அலுவலகத்தை பார்த்துக்கொள்ள நல்ல ஒரு ஆள் தேவைப்பட்டுள்ளது. உடனே அண்ணனை வரச்சொல்லி, அவரின் கையெழுத்து எவ்வாறு உள்ளது என்று பார்த்து, உடனே மன்றத்தின் அலுவலக பொறுப்பாளராக நியமித்துவிட்டார்.
அது முதல் வாழ்க்கையில் கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது.

No comments:

Post a Comment