செய்திகள்

4tamilmedia செய்திகள்

↑ உங்கள் தளத்திலும் இணைக்க!

Tuesday, September 14, 2010

9

நான் அப்போது எந்த வேலையிலும் இல்லாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் பத்திரிக்கை உலகம் என்னை அழைத்தது. முதன்முதலில் “மினி ஸ்டார்” என்று ஒரு திரைப்பட பத்திரிக்கையில் பணி புரியும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் ஆசிரியர் மற்றும் முத்லாளி திரு “ஜாசன்” என்பவர். அவர் அப்போது சென்னை ஆவனக்காப்பகத்தில் பணி புரிந்தார். அவர் துணைவியார் வேறு ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரிந்தார். திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் அவர்களின் வீடு.. அதிலேயே அலுவலகம்.. அவர் காலையில் நான் செய்யவேண்டிய வேலைகளை என்னிடம் சொல்லிவிட்டு அலுவலகம் செல்வார். நான் பத்திரிக்கைக்கு வேண்டிய விசயங்களை சேகரித்து, அவற்றை ஒருங்கிணைத்து அச்சகம் கொண்டு செல்லவேண்டும்.இப்போதுபோல் இல்லை,மொத்த செய்திகளையும் சேகரித்துக்கொண்டு, தேவையான படங்கள் மற்றும் தலைப்புகளை முதலில் ஒரு ஓவியரிடம் கொடுத்து நமது கற்பனைக்கு ஏற்றவாறு டிசைன் செய்து, அதனை அவர் வரைந்துகொண்டு வந்தபிறகு, அவற்றை ”பிளாக்மேக்கர்” இடம் கொடுத்து அவற்றை பிளாக் செய்து,எல்லாவற்றையும் அச்சகத்தில் தலைமை அச்சுகோர்ப்பாளரிடம் சேர்த்துவிட்டு, மேலும் தேவையான அதிகப்படியான விசயங்களையும் எடுத்துக்கொண்டு அச்சகம் செல்லவேண்டும்.. அங்கு அவர்கள் அச்சுகோர்த்த பக்கங்களை கை அச்சில் பதிந்து தருவார்கள். அந்த பக்கங்களை பிழை திருத்தி மீண்டும் மீண்டும் சரிபார்த்து, அன்று அச்சுகோர்த்த பக்கங்களை எடுத்துக்கொண்டு இரவு எந்நேரமானாலும் ஆசிரியரிடம் சென்று அவற்றை கொடுத்துவிட்டுத்தான் வீட்டிற்கு செல்லவேண்டும். அப்போதுதான் அவர் அந்த பக்கங்களை சரிபார்த்து, மறுநாள் காலை என்னிடம் கொடுத்து அவற்றை அச்சில் ஏற்ற அனுமதிப்பார். அவற்றை நான் அச்சகத்தில் கொடுத்து அச்சில் ஏற்ற சொல்லவேண்டும். பின்னர் மீண்டும் அடுத்தடுத்த பக்கங்களை அவ்வாறே செய்யவேண்டும். இதற்கிடையில், நாம் கொண்டுவந்த செய்திகள் பக்கங்களை நிரப்ப போதவில்லையென்றால் நாமாகவோ அல்லது அங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்து செய்திகளை மொழிபெயர்த்தோ நிரப்பவேண்டும். சிவகாசியில் இருந்து அட்டை வண்ணத்தில் அச்சடித்து தயாராக வந்துவிடும். அதையும் அச்சகத்தில் கொடுத்துவிட்டால், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து புத்தகமாக கொடுத்துவிடுவார்கள். அது ஒரு மாத பத்திரிக்கை , மாதத்திற்கு 10,000 முத்ல் 15,000 வரை அச்சடிப்போம். மேலும் அந்த பிரதிகளை அலுவலகம் கொண்டுவந்து இரயில் மற்றும் தபால் மூலம் அனுப்ப, பண்டல்களாக கட்டியெடுத்து இரயில், தபால் அலுவலகங்களுக்கு சென்று அவற்றை அனுப்பிவிட்டு வந்து அலுவலகத்தில் அமர்ந்தவுடன் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அத்ற்கு ஈடு இணையே இல்லை. எனக்கு அப்போது சம்பளம் வாரம் 50 ரூபாய். அச்சகத்தில் வேளை முடிந்தவுடன் மாதாமாதம் 50 ரூபாய் கொடுப்பார்கள். ஒரு அடையாள அட்டை பத்திரிக்கையாளர் சங்கத்தில் கொடுப்பார்கள். அதன்மூலம் நாம் புதிய படங்களின் “பிரிவியு” மற்றும் நடிகர்கள், திரைப்பட பிரபலங்களை பேட்டி எடுப்பது போன்ற பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். புதிய படங்கள் வந்தால், அவற்றைப்பார்த்து நாம்தான் விமரிசனம் எழுதவேண்டும். அக்காலத்தில், கமலஹாசன், ஜெய சித்ரா, ஜெயசுதா, போன்றவர்களை பேட்டி எடுத்துள்ளேன். இதனால் இன்னொரு பலன் கிடைத்தது. அது பல இலக்கியங்களை படிக்க நல்ல திரைப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் ஆகியன.

No comments:

Post a Comment